தீபாவளி பண்டிகை - காரைக்குடி சுங்குடி சேலைகள் வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள் - சிறப்பு கட்டுரை!
Oct 2, 2025, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை – காரைக்குடி சுங்குடி சேலைகள் வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவநாகரீக உடைகள் ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுப்புது டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டாலும், தமிழ்நாட்டை சேர்ந்த இல்லத்தரசிகளின் எவர் கிரீன் சாய்ஸ் சேலைகளாகத் தான் இருக்கின்றன. பல ஆயிரங்கள் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை வாங்கும் பெண்கள் ஒருபுறம் என்றால், எடை குறைவான, விலை அதிகமில்லாத காரைக்குடி சுங்குடி சேலைகளுக்கு தனி மவுசு ஜவுளி சந்தையில் இருக்கிறது…. இந்த காரைக்குடி சேலை தயாரிப்பு பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் நெசவாளர்களின் உழைப்பு பற்றியும் விளக்குகிறது இந்த தீபாவளி சிறப்புத் தொகுப்பு….

வானவில் வண்ணங்களில் மட்டுமல்ல அதனைத் தாண்டியும் தங்களின் சேலைகளில் ஏராளமான வண்ணங்கள் இருப்பதாக கூறுகின்றனர் செட்டிநாடு கைத்தறி சேலைகளை நெசவு செய்யும் நெசவாளர்கள்…

தொடக்க காலங்களில் கண்டாங்கி சேலை என்றழைக்கப்பட்ட செட்டிநாடு சேலைகள், பின்னர் காலச் சூழலுக்கு ஏற்ப, பெண்களின் ரசனைக்கு ஏற்ப அதன் பெயரும், வடிவமைப்பும் மாறியது…..

ஆனால், இந்த செட்டிநாடு சேலைகளின் மிகப்பெரிய பிளஸ் என்றால், அதன் எடையைத் தான் கூறுகின்றனர். வெறும் 300 முதல் 400 கிராம் எடையில் இருக்கும் இந்த சேலைகள், முழுக்க முழுக்க பருத்தி இலைகளால் உருவாக்கப்படுவதால், அனைத்து கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில் இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நெசவாளர்கள் சேலைகள் தயாரித்து வந்தாலும் காரைக்குடி மற்றும் அதன் அருகே உள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள் ளிட்ட பகுதியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் தயாரிக்கும் செட்டிநாடு காட்டன் சேலைகளுக்கு தனி மவுசு உண்டு.

ஆண்டு முழுவதும் கைத்தறி சேலைகள் தயாரிப்பில் இங்குள்ள நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைத்தறி நெசவாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு அன்னபச்சி ரகம், தாழம்பூ பூக்கரை ரகம், செட்டிநாடு ஸ்பெஷல் கோட்டையூரான் பார்டர் ரகம், செல்ப்முந்தி ரகம் உள்ளிட்ட பல டிசைன்களில் சேலைகள் தயாரித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இளம் பெண்கள் அணியக் கூடிய சுடிதார், சல்வார் வகைகளையும் இப்பொழுது தயாரித்து வருகின்றனர். இந்த செட்டிநாட்டு சேலைகளின் விலை ரூ.700 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

Tags: deepavaliDiwalKaraikudi Chungudi sarees
ShareTweetSendShare
Previous Post

சீரான நீர்வரத்து – குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

Next Post

ஈரான் ராணுவ நிலைகளை பஸ்பமாக்கிய இஸ்ரேல் – சிறப்பு கட்டுரை!

Related News

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies