திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் பாறை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர், திண்டுக்கல்லில் இருந்து வேன் வாடகைக்கு எடுத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். வழியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகிலிருந்த பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த ஒரு வயது கைக்குழந்தை உட்பட 6 பெண்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கொடைக்கானல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.