செங்கல்பட்டு, தனியார் பள்ளயில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஸ்ரீ கே. சுன்னிலால் ஜெயின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது தூய்மை பணியாளர்கள் தேசிய கொடியை ஏற்றுமாறு விழா குழுவினர் கேட்டுக்கொணடனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் தேசிய கொடி ஏற்றினர். பின்னர் அவர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.
பின்னர் தூய்மை பணியாளர்களின் சேவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செத்துவதை போல் தூய்மை பணியாளர்களுக்கும் வணக்கம் செலுத்த வேண்டும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.