அமலாக்கத்துறை வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில்
ஆஜரானார்.
அப்போது, தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்திவைக்கப்பட்டது.