பட்டாசு வேண்டாம் : பறவைகள் போதும், அசர வைக்கும் கிராம மக்கள் - சிறப்பு கட்டுரை!
May 20, 2025, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசு வேண்டாம் : பறவைகள் போதும், அசர வைக்கும் கிராம மக்கள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 31, 2024, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் மக்களுக்கிடையே, தங்கள் ஊருக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் பாதுகாப்பிற்காக ஒரு கிராமமே பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

நெல்லை மாவட்டத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூந்தன்குளம் குக்கிராமம். பல நீர்நிலைகளும், ஏராளமான மரங்களும் நிறைந்து எழில்கொஞ்சும் கிராமமாக காட்சியளிக்கும் கூந்தன்குளத்தை, 1994-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

பொதுவாக வெளிநாடுகளில் குளிர்காலம் தொடங்கும்பொது அங்குள்ள பறவைகள், தங்கள் இனப்பெருக்கத்திற்காக சீரான சீதோஷண நிலை உள்ள பகுதிகளுக்கு படையெடுத்துச் செல்லும். அப்படி சைபீரியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி போன்ற பல வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள், கூட்டம் கூட்டமாக தங்கிச்செல்லும் இடங்களில் கூந்தன்குளம் கிராமமும் ஒன்று.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஃபின்டெயில், பிளாக்விங் டுவிஸ்டில், கிரேகிரான், வக்ரா, கிரின்சன் என சுமார் 43 வகையான வெளிநாட்டுப் பறவைகள், இந்த கூந்தன்குளத்தில் தங்கி, கூடு கட்டி, குஞ்சு பொரித்துவிட்டு, சீசன் முடிந்ததும் தங்கள் தாயகத்திற்கு திரும்பிச் செல்லும். இதுபோக செல்கால்நாரை, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல உள்நாட்டு பறவைகளும் கூந்தன்குளத்திற்கு அவ்வப்போது விசிட் அடிக்குமாம்.

கடந்த பல ஆண்டுகளாக சீசன் காலத்தில் சுமார் 1 லட்சம் பறவைகள் வரை, கூந்தன்குளம் கிராமத்திற்கு வந்து தங்கிச் சென்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்துள்ளதால் பறவைகள் வரத்து குறைவாக உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், சரணாலயத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, கடல்தாண்டி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்டு வரும் பல வெளிநாட்டு பறவைகள், பயப்படாமல் தங்கியிருந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்வு பூர்வமான ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் கூந்தன்குளம் கிராம மக்கள்.

அதற்காக பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் கூட பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வரும் இவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் அந்த எண்ணத்தை ஊட்டி வளர்ப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு கூட தங்கள் குழந்தைகள் புத்தாடைதான் கேட்பார்கள், பட்டாசுகளை கேட்பதில்லை என பெருமிததுடன் கூறுகின்றனர் இந்த கிராமவாசிகள்.

இங்கு வரும் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் விதமாக, கிராம மக்களே தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, பறவைகளின் பாதுகாவலர்களாக வலம் வருவது கூடுதல் சிறப்பு. சுயநலம் நிறைந்த உலகில் தங்கள் சந்தோஷம், தங்கள் தேவை என எதையும் பார்க்காமல் பறவைகளின் பாதுகாப்பை உயர்வென கருதும் கூந்தன்குளம் மக்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்தானே….

Tags: protect foreign birdsKoonthankulamNellaiDiwalibursting crackers
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி லேகியம் – கமகம வாசனையுடன் தயாரிப்பது எப்படி? – சிறப்பு கட்டுரை!

Next Post

தீபாவளி பண்டிகை – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies