ஐ-போன் ஏற்றுமதி உச்சம்! : ஆதிக்கம் செலுத்தும் இந்தியா பெரும் அடிவாங்கிய சீனா!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஐ-போன் ஏற்றுமதி உச்சம்! : ஆதிக்கம் செலுத்தும் இந்தியா பெரும் அடிவாங்கிய சீனா!

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பாண்டில், 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

Xiaomi, Oppo மற்றும் Vivo போன்ற சீன பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் சந்தை பங்கு வெறும் 7 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

ஆனாலும், இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதித் துறையின் முதுகெலும்பாக ஆப்பிள் ஐபோன்கள் மாறிவிட்டன. இந்தியாவில் இருந்து, அமெரிக்காவுக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி வெறும் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்தது. ஆப்பிள் இந்தியாவில் தன் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் மானியங்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்தியாவில் ஆப்பிள் தான் ஐபோன்கள் உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவிலிருந்து வெளியேறி ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இந்தியா மாறியுள்ளது.

Foxconn Technology Group, Pegatron Corp., மற்றும் Tata Electronics ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்கின்றன.

குறிப்பாக, இந்தியாவின் மொத்த ஐபோன் ஏற்றுமதியில் 50 சதவீதத்துக்கும் மேல், சென்னைக்கு அருகிலுள்ள Foxconn நிறுவனமே தயாரிக்கிறது.

கடந்த ஆண்டு விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை வாங்கிய டாடா குழுமம், ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை சாதனங்களை அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனமானது.

கடந்த ஆறு மாதங்களில் டாடா குழுமம்,சுமார் 1.7 பில்லியன்அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

இது கடந்த ஆண்டு காலத்துடன் ஒப்பிடும்போது மதிப்பில் 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்ற ஐபோன் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய அனுமதி பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஏற்கெனவே மும்பை, டெல்லி,புனே ஆகிய மாநகரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களையும் ஆப்பிள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, பெங்களூருவில் புதிய சில்லறை விற்பனை நிலையத்தை திறக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ந்து வரும் ஐபோன் உற்பத்தி, நாட்டின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி நிலப்பரப்பை மறுவடிவமைத்துள்ளது. ஐபோன்களே, இப்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Tags: apple i phoneI-phone export peak! : Dominant India is a major setback for China!
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி : இருவர் சுட்டுக்கொலை!

Next Post

இந்திய – சீன எல்லைப்பகுதியில் மீண்டும் ரோந்து பணி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies