ஐ-போன் ஏற்றுமதி உச்சம்! : ஆதிக்கம் செலுத்தும் இந்தியா பெரும் அடிவாங்கிய சீனா!
Jul 24, 2025, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஐ-போன் ஏற்றுமதி உச்சம்! : ஆதிக்கம் செலுத்தும் இந்தியா பெரும் அடிவாங்கிய சீனா!

Web Desk by Web Desk
Nov 1, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பாண்டில், 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

Xiaomi, Oppo மற்றும் Vivo போன்ற சீன பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் சந்தை பங்கு வெறும் 7 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

ஆனாலும், இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதித் துறையின் முதுகெலும்பாக ஆப்பிள் ஐபோன்கள் மாறிவிட்டன. இந்தியாவில் இருந்து, அமெரிக்காவுக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி வெறும் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்தது. ஆப்பிள் இந்தியாவில் தன் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் மானியங்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்தியாவில் ஆப்பிள் தான் ஐபோன்கள் உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவிலிருந்து வெளியேறி ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இந்தியா மாறியுள்ளது.

Foxconn Technology Group, Pegatron Corp., மற்றும் Tata Electronics ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்கின்றன.

குறிப்பாக, இந்தியாவின் மொத்த ஐபோன் ஏற்றுமதியில் 50 சதவீதத்துக்கும் மேல், சென்னைக்கு அருகிலுள்ள Foxconn நிறுவனமே தயாரிக்கிறது.

கடந்த ஆண்டு விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை வாங்கிய டாடா குழுமம், ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை சாதனங்களை அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனமானது.

கடந்த ஆறு மாதங்களில் டாடா குழுமம்,சுமார் 1.7 பில்லியன்அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

இது கடந்த ஆண்டு காலத்துடன் ஒப்பிடும்போது மதிப்பில் 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்ற ஐபோன் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய அனுமதி பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஏற்கெனவே மும்பை, டெல்லி,புனே ஆகிய மாநகரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களையும் ஆப்பிள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, பெங்களூருவில் புதிய சில்லறை விற்பனை நிலையத்தை திறக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ந்து வரும் ஐபோன் உற்பத்தி, நாட்டின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி நிலப்பரப்பை மறுவடிவமைத்துள்ளது. ஐபோன்களே, இப்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Tags: apple i phoneI-phone export peak! : Dominant India is a major setback for China!
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி : இருவர் சுட்டுக்கொலை!

Next Post

இந்திய – சீன எல்லைப்பகுதியில் மீண்டும் ரோந்து பணி!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies