தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈராக்கில் இருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் — ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையேயான போர் 12 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், ஹமாஸ் தீவிரவாத படையினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸாவில், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லாவினர் மீதும் கடுமையான வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் மீது ஈரான், 200 பாலிஸ்ட்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதன் மூலம் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஈரானும் நேரடியாக இறங்கியது. ஈரானின் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த வாரம் ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.

இதனை தொடர்ந்து, இருநாடுகளும் பதிலுக்குப் பதில் இராணுவத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானையும், இஸ்ரேலையும் வலியுறுத்தி உள்ளன.

இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி போராக இருக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்பட இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான மற்றும் வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரானின் உச்சத் தலைவரின் உயர்மட்ட உதவியாளரான, முகமது முகமதி கோல்பயேகனி, இஸ்ரேலின் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்த ஈரானின் வான் பாதுகாப்புச் செயல்திறனைப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய ,கொமேனி, இஸ்ரேல் தாக்குதல்களைப் புறக்கணிப்பது என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது இராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் ஈரானின் உச்சத் தலைவர்.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேலை தாக்க ஈரான் தயாராகி வருவதாக இஸ்ரேல் உளவுத்துறையும் உறுதி படுத்தி இருக்கிறது. ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவவீரர்கள் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணுசக்தித் திறனைப் பெறுவதைத் தடுப்பதே இஸ்ரேலின் முதன்மையான இலக்கு என்று கூறியிருக்கிறார். மேலும்,முன்னெப்போதையும் விட இன்றைக்கு இஸ்ரேல் வலிமையாக இருப்பதை ஈரான் மறந்து விடக் கூடாது என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மீண்டும் ஈரான் இஸ்ரேலைத் தாக்க முடிவெடுத்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Tags: IranAir StrikeIran missile attackIsraelLebanonHamasgaza
ShareTweetSendShare
Previous Post

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் திருட்டு – இருவர் கைது!

Next Post

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies