தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் - சிறப்பு கட்டுரை!
Sep 17, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈராக்கில் இருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் — ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையேயான போர் 12 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், ஹமாஸ் தீவிரவாத படையினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸாவில், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லாவினர் மீதும் கடுமையான வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் மீது ஈரான், 200 பாலிஸ்ட்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதன் மூலம் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஈரானும் நேரடியாக இறங்கியது. ஈரானின் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த வாரம் ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.

இதனை தொடர்ந்து, இருநாடுகளும் பதிலுக்குப் பதில் இராணுவத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானையும், இஸ்ரேலையும் வலியுறுத்தி உள்ளன.

இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி போராக இருக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்பட இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான மற்றும் வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரானின் உச்சத் தலைவரின் உயர்மட்ட உதவியாளரான, முகமது முகமதி கோல்பயேகனி, இஸ்ரேலின் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்த ஈரானின் வான் பாதுகாப்புச் செயல்திறனைப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய ,கொமேனி, இஸ்ரேல் தாக்குதல்களைப் புறக்கணிப்பது என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது இராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் ஈரானின் உச்சத் தலைவர்.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேலை தாக்க ஈரான் தயாராகி வருவதாக இஸ்ரேல் உளவுத்துறையும் உறுதி படுத்தி இருக்கிறது. ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவவீரர்கள் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணுசக்தித் திறனைப் பெறுவதைத் தடுப்பதே இஸ்ரேலின் முதன்மையான இலக்கு என்று கூறியிருக்கிறார். மேலும்,முன்னெப்போதையும் விட இன்றைக்கு இஸ்ரேல் வலிமையாக இருப்பதை ஈரான் மறந்து விடக் கூடாது என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மீண்டும் ஈரான் இஸ்ரேலைத் தாக்க முடிவெடுத்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Tags: IranAir StrikeIran missile attackIsraelLebanonHamasgaza
ShareTweetSendShare
Previous Post

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் திருட்டு – இருவர் கைது!

Next Post

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமித்ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை!

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்பு 1,251-ஆக அதிகரிப்பு!

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

Load More

அண்மைச் செய்திகள்

“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து!

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies