தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் - சிறப்பு கட்டுரை!
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈராக்கில் இருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் — ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையேயான போர் 12 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், ஹமாஸ் தீவிரவாத படையினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸாவில், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லாவினர் மீதும் கடுமையான வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் மீது ஈரான், 200 பாலிஸ்ட்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதன் மூலம் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஈரானும் நேரடியாக இறங்கியது. ஈரானின் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த வாரம் ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.

இதனை தொடர்ந்து, இருநாடுகளும் பதிலுக்குப் பதில் இராணுவத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானையும், இஸ்ரேலையும் வலியுறுத்தி உள்ளன.

இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி போராக இருக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்பட இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான மற்றும் வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரானின் உச்சத் தலைவரின் உயர்மட்ட உதவியாளரான, முகமது முகமதி கோல்பயேகனி, இஸ்ரேலின் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்த ஈரானின் வான் பாதுகாப்புச் செயல்திறனைப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய ,கொமேனி, இஸ்ரேல் தாக்குதல்களைப் புறக்கணிப்பது என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது இராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் ஈரானின் உச்சத் தலைவர்.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேலை தாக்க ஈரான் தயாராகி வருவதாக இஸ்ரேல் உளவுத்துறையும் உறுதி படுத்தி இருக்கிறது. ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவவீரர்கள் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணுசக்தித் திறனைப் பெறுவதைத் தடுப்பதே இஸ்ரேலின் முதன்மையான இலக்கு என்று கூறியிருக்கிறார். மேலும்,முன்னெப்போதையும் விட இன்றைக்கு இஸ்ரேல் வலிமையாக இருப்பதை ஈரான் மறந்து விடக் கூடாது என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மீண்டும் ஈரான் இஸ்ரேலைத் தாக்க முடிவெடுத்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Tags: IsraelLebanonHamasgazaIranAir StrikeIran missile attack
ShareTweetSendShare
Previous Post

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் திருட்டு – இருவர் கைது!

Next Post

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies