இந்திய மொழிக்கு கவுரவம் - அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சீட்டில் பெங்காலி மொழி - சிறப்பு கட்டுரை!
May 22, 2025, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மொழிக்கு கவுரவம் – அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சீட்டில் பெங்காலி மொழி – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் ஆங்கிலம் தவிர மேலும் நான்கு மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு மொழிகளில், ஒன்றாக இடம் பிடித்த ஒரே இந்திய மொழி பெங்காலி மட்டுமே. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு சீட்டில், இந்தியாவின் பிற மொழிகள் இடம் பெறாமல், பெங்காலி மொழி இடம் பெற்றதன் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் மக்கள் செல்வாக்கு ஏறக்குறைய சரி சமமாகவே உள்ளது. எனவே யார் அமெரிக்காவின் அடுத்த அதிபர் ? என்பது கணிக்க முடியாமலேயே இருக்கிறது.

அமெரிக்காவில் வாக்குச் சீட்டு முறையில் தான் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், நியூ யார்க் வாக்காளர்களுக்கு மட்டும் வாக்கு சீட்டில், ஆங்கிலம் தவிர மேலும் நான்கு மொழிகள் அச்சிடப் பட்டுள்ளன. பொதுவாகவே, பன்முக கலாச்சாரங்களின் உறைவிடமாக விளங்கும் நியூயார்க், உருகும் பானை என்று அழைக்கப் படும்.

நியூயார்க்கில் சுமார் 200க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்று நகர திட்டமிடல் துறை தெரிவித்துள்ளது. இந்த பன்முகத்தன்மையை மனதில் வைத்து, நியூயார்க் நகர தேர்தல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான், ஆசிய மொழிகளை வாக்குச்சீட்டில் சேர்த்திருக்கிறார்.

எனவே, வாக்குச்சீட்டில், ஆங்கிலத்துடன், சீனமொழி, ஸ்பெயின் மொழி, கொரிய மொழி மற்றும் இந்திய மொழியும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அமெரிக்க வாக்கு சீட்டில், இடம்பிடித்த இந்திய மொழி பெங்காலி என்பது தான் ஆச்சரியம்.

நியூயார்க்கில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களில் 66 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் முதல் மொழியாக இல்லை என்றும், நகரில் உள்ள ஆசிய அமெரிக்கர்களில் 45 சதவீதம் பேர் ஆங்கிலத்தில் மிக குறைந்த புலமையே பெற்றுள்ளனர் என்றும், ஆசிய அமெரிக்கன் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருந்தாலும், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் ஏராளமான பெங்காலி மொழி பேசும் மக்களே நியூயார்க்கில் அதிகம் உள்ளனர்.

ஆசிய அமெரிக்கன் ஃபெடரேஷனின் 2022 கட்டுரையின்படி, நியூ யார்க்கில், 53.6 சதவீத மக்கள் சீன மொழி பேசுகின்றனர். நியூயார்க்கில் 12.2 சதவீத மக்கள் பெங்காலிமொழி பேசுகின்றனர். நியூயார்க்கில் 3.3 சதவீத மக்களே இந்தி மொழி பேசுகின்றனர். இதன் படி, பெங்காலியே நியூ யார்க்கில் அதிகம் பேசப்படும் இரண்டாவது ஆசிய மொழியாகும். இந்த பட்டியலில் இந்த மொழி ஆறாவது இடத்தில் உள்ளது.

இதன் காரணமாகவே, வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க, நியூயார்க் வாக்குச்சீட்டில் பெங்காலி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக,1965 ஆம் ஆண்டு வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தின் கீழ், தெற்காசிய சிறுபான்மை மக்களும் வாக்களிக்க உதவியாக மொழி விருப்பத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2013 ஆம் ஆண்டு நியூ யார்க்கின் குயின்ஸ் பகுதியில் பெங்காலி மொழி வாக்குச்சீட்டுகளில் முதன்முதலில் பயன்படுத்த பட்டது. நியூ யார்க்கில் வாழும் இந்தியர்கள், தேர்தலில் வாக்களிக்க இந்த நடவடிக்கை உதவுகிறது என்று இந்திய சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் அவினாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

Tags: americawashingtonkamala harrisDonald TrumpRepublican candidateMarylandtrump leadingamerica votingbengali in america election
ShareTweetSendShare
Previous Post

இம்மாத இறுதிவரை கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Next Post

ஈரோட்டில் மாநில அளவிலான தடகள போட்டி தொடக்கம்!

Related News

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலி!

சிந்து நதி நீர் நிறுத்தம் – பாகிஸ்தானில் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வரும் சீனா!

சீனாவில் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகும் ரோபோக்கள்!

சீனாவில் இடிந்து விழுந்த ஃபெங்யாங் டிரம் கோபுரம் – சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் சூரி

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்தியவர் செல்போன் கடை ஊழியரிடம் தகராறு!

Load More

அண்மைச் செய்திகள்

தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

முடிவுக்கு வந்த போர் பதற்றம் – அட்டாரி வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு!

அதிகார வரம்பை மீறி செயல்பட்ட பாக்.தூதரக அதிகாரி – 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு!

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான் தரப்பு வாதம்!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

தமிழக பாஜக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆலங்கட்டி மழையால் சேதம் அடைந்த விமானத்தின் முன்பகுதி – அந்தரத்தில் ஆட்டம், அலறிய பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies