சிக்கலில் காங். மாநில அரசுகள் : வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கலில் காங். மாநில அரசுகள் : வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கியதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இலவசங்களால் கர்நாடக அரசின் நிதிநிலை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது ? என்பது பற்றி பார்ப்போம்.

கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு, தேர்தல் வாக்குறுதிகளில் அக்கட்சி அளித்த இலவசங்கள் முக்கியப் பங்கு வகித்தன எனக் கூறப்பட்டது.

மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு பல்வேறு துறைகளின் கீழ் க்ருஹ லட்சுமி, க்ருஹ ஜோதி, சக்தி மற்றும் யுவநிதி என நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே உள்ள அன்னபாக்யா திட்டத்தையும் சேர்த்து, மொத்தம் ஐந்து இலவசத் திட்டங்களைக் கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு செயல்படுத்த தொடங்கியது.

நடப்பு நிதியாண்டில் மாநில பட்ஜெட்டில், இந்த இலவச திட்டங்களுக்காக 53 ஆயிரத்து 674 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் மதிப்பீட்டை விட 47 சதவீதம் அதிகமாகும். மொத்த இலவச திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில், பாதிக்கு மேல் க்ருஹ லட்சுமி திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்குவதே க்ருஹ லட்சுமி திட்டமாகும்.

இந்தத் திட்டத்துக்காக மட்டும் கர்நாடக அரசு 28,608 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது சமூக நலன் மற்றும் ஊட்டச்சத்துக்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவில் ஆறில் மூன்று சதவீதமாகும். கர்நாடக அரசு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் சக்தி திட்டத்துக்கு 5,015 கோடி ரூபாயும், அன்னபாக்யா திட்டத்துக்கு 9,744 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியாண்டுக்கான கர்நாடகாவின் வருவாய் பற்றாக்குறை 27,354 கோடி ரூபாயாகும். இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும். காங்கிரஸ் ஆட்சியின் இலவச அறிவிப்புக்களால், இந்த வருவாய் பற்றாக்குறை மேலும் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2024-2025ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 82,981 கோடி ரூபாயாக உள்ளது. இது மொத்த மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 2.95 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 2.7 சதவீதம் அதிகமாகும்.

கர்நாடகா 2004ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையே இல்லாமல் இருந்தது. அதன்பின் மேலும் அதே ஆண்டு, வருவாய் உபரியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தின் நிலுவையில் உள்ள கடன் மாநில உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீதமாகும். இதுவும் சென்ற ஆண்டை விட அதிகமாகும்.

கர்நாடக அரசுக்கு நிலுவையில் உள்ள மொத்த கடன்களில் பொதுக் கடனின் பங்கு மட்டும் மூன்று ஆணடுகளுக்கு முன் 75 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு பொதுக்கடனின் பங்கு 78 சதவீதமாக ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், ‘டிக்கெட் எடுக்க தங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்’ என சில மாணவியர் இ – மெயில் மற்றும் ‘எக்ஸ்’ வலைதளம் வழியாக கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்று பேசியிருந்தார்.

இதற்கிடையே, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.

இதன் மூலம், ஜனநாயகத்துக்கு எதிராக மக்களைத் தவறாக வழிநடத்தியதை காங்கிரஸ் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, காங்கிரசை முழுமையாக அம்பலப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி, நவம்பர் ஒன்றாம் தேதி முதல், காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை மையமாக வைத்து தொடர் ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் மட்டுமின்றி, இமாச்சல பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் இலவச பேருந்து பயணம், இலவச மின்சாரம், மாதாந்திர ஓய்வூதியம் என பல இலவசங்களை வாக்குறுதியாக தந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில், நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க முடியாத நிலையில் இருக்கிறது.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிப்படி, கடன் தள்ளுபடிக்காக இன்னும் தெலுங்கானா விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்பும், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆட்சி செய்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.

Tags: Gruha LakshmiGruha JyotiShaktchief Minister SiddaramaiahKarnataka governmentCongress-ruled statesfinancial straits
ShareTweetSendShare
Previous Post

சாத் பூஜை கோலாகலம் – கங்கையில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Next Post

சம்பா சாகுபடி தீவிரம் – தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த உர மூட்டைகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies