அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot - சிறப்பு கட்டுரை!
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலம் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய அரை மனித ரோபாவை தயாரித்துள்ளது. அரசியலமைப்பு அருங்காட்சியகத்தின் சிட்டியாக செயல்படவிருக்கும் சம்வித் ரோபோட் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது நீதித்துறைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகம் வரும் 26 ஆம் தேதி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சுதந்திரங்கள் குறித்த ஒருங்கிணைந்த பயிலகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் அனைத்தும் ஏடுகளில் பொறிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சாதனங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்தாலும், அருங்காட்சியகத்திற்கு வரும் தனி நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக அரை மனித ரோபாவை ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், ஐஐடி சென்னையும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்திய அரசியலமைப்பு அருங்காட்சியகத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக செயல்படும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அரசியலமைப்பு சட்டத்த்தின் அத்தனை அம்சங்களையும் உரிமைகளையும் இந்த ரோபாவால் விளக்க முடியும் என்கின்றனர் ரோபோவை வடிவமைத்த வல்லுநர்கள்

60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபா, அரை மனித உருவத்துடன் 4 சிறிய சக்கரங்கள் உடன் நகரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இந்த ரோபோவுடன் பேசுவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீன் வாயிலாக கமெண்டுகளை கொடுத்தும் இயக்கச் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அனைவராலும் ரசிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ரோபா, தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாக அமையும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

 

Tags: Jindal Global University in SonipatIIT MadrasHaryanaJindal Global Universitysemi-human robot
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ராஜ தந்திரம் : கயானாவை இந்தியா குறிவைப்பது ஏன்? சிறப்பு கட்டுரை!

Next Post

தஞ்சை தமிழ் பல்கலைக்​கழக பணி நியமன விவகாரம் – விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies