இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து - CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 09:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்றும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான CIA -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும், CIA வில் 15 ஆண்டுகள் பணியாயற்றிய முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியாவை தூண்டி விடுவது, பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் பணியாது என்றும், எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுக்கும் என்றும் கூறியுள்ள ஜான் கிரியாகோ, 2016-ல் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019-ல் பாலகோட் தாக்குதல், மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

2001 நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும், திருப்பித் தாக்கும் உரிமை பெற்றிருந்தும் இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சியில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்கள் நிதிஉதவி வழங்கியதாகவும் அதற்குப் பிரதிபலனாகப் பாகிஸ்தானின் அணு ஆயுதக் களஞ்சியத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் முஷாரப் அமெரிக்காவிடம் ஒப்படைத்ததாகவும் விவரித்துள்ளார்.

இராணுவத்தையும், பயங்கரவாதிகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க, பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதாக நடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை முஷாரப் அனுமதித்துக் கொண்டிருந்ததாகவும், அமெரிக்க என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்ய அனுமதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாகிஸ்தானின் பிரபல அணுசக்தி விஞ்ஞானியான ஏ.கே.கானை அமெரிக்கா கொல்லாமல் விட்டதாகக் கூறியுள்ள ஜான் கிரியாகோ, தற்போது, சீனா மற்றும் இந்தியாவுடன் சவூதி அரேபியா நல்லுறவை வளர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வட கொரியா, ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியதால், உலகின் மிகவும் முக்கியமான அணுசக்தி கடத்தல்காரர்களில் ஒருவர் ஏ.கே. கான் குறிப்பிடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு, சித்திரவதை திட்டங்களை பகிரங்கமாக உறுதிப்படுத்திய முதல் CIA அதிகாரி என்பதுடன், ரகசிய தகவல்களை வெளியிட்ட காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் CIA அதிகாரி ஜான் கிரியாகோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: india vs pakistanTodayIndia can never be defeated: Scolding Pakistan is dangerous - Former CIA officer warnsIndiapakistan
Share
Tweet
SendShare
Previous Post

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

Next Post

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies