அதிகரிக்கும் காற்று மாசு : அபாய நிலையில் வட மாநிலங்கள் - சிறப்பு கட்டுரை!
Jul 29, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் காற்று மாசு : அபாய நிலையில் வட மாநிலங்கள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 21, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் மிக மிக மோசமாகி வருகிறது. ஒரு நாளைக்கு 50 சிகரெட்டுகள் குடித்தால், உடல்நலத்தில் என்ன தீங்கு உண்டாகுமோ? அதே பாதிப்புக்களை டெல்லியின் காற்று மாசு, ஏற்படுத்துகிறது என்று மருத்துவ அறிஞர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .

உலகின் மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரமாக டெல்லி மாறியுள்ளது. செவ்வாய் கிழமை நிலவரப்படி, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 492 என பதிவாகி உள்ளது. அலிபூர், ஆனந்த் விஹார், பவானா, நரேலா, பூசா மற்றும் சோனியா விஹார் போன்ற இடங்களில், காற்றுத் தரக் குறியீடு ஐந்நூறை தாண்டி இருக்கிறது. குறிப்பாக, டெல்லி காற்றின் தரம் சராசரியாக, 978 ஆக இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது.

டெல்லியின் இந்த காற்று மாசு, சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு சமமான தீங்கை விளைவிக்கும் என்று சுவாச மற்றும் நுரையீரல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாசு மிகுந்த காற்று, நுரையீரலில் ஆழமாக சென்று ரத்த ஓட்டத்தில் கலக்கின்றது.

இந்த காற்றின் மாசால், இருமல், மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டு, நாளடைவில், ஆஸ்துமா, நுரையீரல்பாதிப்பு, இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களும் ஏற்படுகின்றன.

டெல்லியில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் இத்தகைய உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதில் பாதிப்படைகின்றனர். டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவில் காற்றின் தரக் குறியீடு 631 ஆக பதிவாகியுள்ளது. இது ஒரு நாளைக்கு 34 சிகரெட்டுகள் புகைப்பதற்குச் சமமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் காற்றின் தரக் குறியீடு 237 என பதியாகியுள்ளது. இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 12 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமான தீங்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பஞ்சாபில் காற்றின் தரக் குறியீடு 233 ஆக பதிவாகி உள்ளது. இது ஒரு நாளைக்கு 9 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த மாநிலங்கள் மட்டுமின்றி, பெரும்பாலான வடமாநிலங்களில் காற்றின் தரம் மிக மோசமாகவே உள்ளன. பார்க்கப் பனி மூட்டம் மாதிரி தெரிந்தாலும், காற்றின் மாசுபாட்டால், சில மீட்டர் தூரத்தில், என்ன இருக்கிறது என்று தெரியாத நிலைமை தான் உள்ளது.

அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது குறைந்து வருகிறது. இதனால், டெல்லி மட்டுமின்றி, நொய்டா, குர்காவன், லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மால்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

பாதுகாப்பான காற்றின் தரத்தை பராமரிக்க மால்கள் மேம்பட்ட வடிகட்டுதல் அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. வார இறுதி முன்பதிவு மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கும் உணவுச் சேவைத் துறை, மேலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கடுமையான வெப்பம், பெரிய திரைப்பட வெளியாகாதது, பல மாதங்கள் நீடித்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றால் சரிவைக் கண்ட மால்கள் இப்போது காற்றின் மாசால், மேலும் பாதிப்படைந்துள்ளன. தரவு நுண்ணறிவு நிறுவனமான ஜியோஐக்யூவின் தகவல் படி, 30 மால்களில், 10 மால்கள் மட்டுமே சராசரி தினசரி வருகையை அதிகரித்துள்ளன.

பொதுவாக, ஒரு ஷாப்பிங் மாலுக்கு 100 பேர் வந்தால், சுமார் 40 பேர் வரை மல்டிபிளக்ஸ் சென்று திரைப்படம் பார்ப்பதுண்டு. இப்போது மல்டிபிளக்ஸ்களில் மக்கள் வருகை கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, முடிந்த காலாண்டில் PVR INOX நிறுவனப் பங்கு விலை சரிந்துள்ளது.

தலைநகர் டெல்லி உட்பட, வட மாநிலங்களில் , காற்றின் மாசு, மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. இதற்கிடையே, காற்று மாசு பாட்டைத் தடுக்க, செயற்கை மழை மட்டுமே ஒரே வழி என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: delhiair qualityMedical experts warningDelhi's air quality indexespiratory problems
ShareTweetSendShare
Previous Post

அதிகரித்து வரும் பிரபலங்களின் பிரிவு – சிறப்பு தொகுப்பு!

Next Post

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies