கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் - சிறப்பு தொகுப்பு!
Oct 2, 2025, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது தந்தையின் பயிற்சியால் கேரம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த 17 வயதான காஸிமா. உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான சாதனையை நிகழ்த்தியிருக்கும் காஸிமா குறித்தும், அவரின் விடா முயற்சி குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

சிறு வயதில் வீட்டின் சுவர், பீரோ கண்ணாடி, கதவு, ஜன்னல் என ஒவ்வொன்றிலும், எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதை எழுதி வைத்து, அதனை அடிக்கடி பார்த்து நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொண்டது அனைவருக்குமே நினைவிருக்கும்.

அப்படியாக முகம் பார்க்கும் கண்ணாடியில் I AM WORLD CHAMPION என எழுதிவைத்து, தன்னைத் தானே தினம் தினம் செதுக்கி ஊக்கப்படுத்தியதோடு அதனை நிஜமாக்கி சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வீராங்கனை காஸிமா..

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6 வது கேரம் போர்டு உலகக்கோப்பை தொடரில் தனி நபர் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப் பிரிவு என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்ற காஸிமா ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்.

அதிலும் தனி நபர் பிரிவில் இறுதிப் போட்டியில் சக இந்தியரான 12 முறை தேசிய சாம்பியன் மற்றும் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று ராஷ்மி குமாரியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றுள்ளார் காஸிமா….

காஸிமா வெற்றி அவர் குடும்பத்தை சார்ந்தவர்களின் வெற்றி மட்டுமே அல்ல, அவர் வசித்து வரும் ஒட்டுமொத்த புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதி மக்களின் வெற்றியாக அமைந்துள்ளது. காஸிமாவின் வெற்றியை செரியன் நகர் மக்கள் இரவோடு இரவாக கொண்டாடிய விதம், காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

7 வயது முதலே சென்னை புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரில் உள்ள கேரம் போர்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காஸிமாவின் பயிற்சியாளர் அவருடையை தந்தை மஹபூப் பாஷா தான் என்பது தான் கூடுதல் தகல். காலையில் ஆட்டோ ஓட்டுநராகவும் மாலையில் கேரம் போர்டு பயிற்சியாளராகவும் காஸிமாவோடு சேர்த்து இதுவரை 14 தேசிய சாம்பியன்களை உருவாக்கியுள்ளார் மஹபூப் பாஷா

காஸிமா உலகக் கோப்பை வென்றதன் மூலம் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கும் பெருமையை தேடித் தந்திருக்கும் காஸிமாவின் வெற்றிப்பயணம் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

 

Tags: WORLD CHAMPIONChennaiWashermanpetCarrom World CupKasima
ShareTweetSendShare
Previous Post

சென்னை துரைப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!

Next Post

மயிலாப்பூரில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies