மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
வட அமெரிக்கா நாடான மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி உள்ளது. இந்த விடுதியில் வழக்கம்போல் மதுபிரியர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது மதுபான விடுதிக்குள் திடீரென நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.