பாமக-திமுக வலுக்கும் மோதல்! : முதலமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் பாமகவினர்!
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாமக-திமுக வலுக்கும் மோதல்! : முதலமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் பாமகவினர்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் பேச்சு அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முதலமைச்சருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி மீதான ஊழல் புகாரில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றிருப்பது தமிழக அரசியல் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் – அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை நங்கநல்லூர் அருகே திட்டம் ஒன்றை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சரிடம், ராமதாஸின் அறிக்கையை சுட்டிக்காட்டி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உரிய பதிலை அளிக்காமல் ராமதாஸிற்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என அலட்சியமாக பேசிவிட்டு சென்றார்.

முதலமைச்சரின் இந்த பேச்சு பாமகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமகவின் தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ், ”தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது, மக்கள் பணம் கொள்ளை போகிறது, இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என முதலமைச்சரை அன்புமணி காட்டமாக விமர்சித்திருந்தார்.

ராமதாஸை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முதலமைச்சரை விமர்சிக்கத் தொடங்கிய பாமகவினர், ராமதாஸின் சாதனைகளாக கூறப்படுபவைகளை பட்டியலிட்டு விவாதிக்க தொடங்கினர். இதற்கிடையில் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் பேச்சு ஆணவப்போக்கை வெளிப்படுத்துவதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு தொடர்பாக முதலமைச்சரின் கருத்தில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதற்காக மன்னிப்பு கேட்கும் பழக்கமில்லை எனவும் தெரிவித்தார்.

எதற்கெடுத்தாலும் ஊழல் குற்றச்சாட்டை கூறுவது பாமக நிறுவனர் ராமதாசுக்கு வந்தது கைவந்தது கலை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதியின் பேச்சு பாமகவினர் மத்தியில் கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பாமகவினர் முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம், அரியலூர், சேலம், ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் என பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸின் பேச்சு குறித்து முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை அறிக்கைகளாக வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த பேச்சை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்பது தான் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.

Tags: cm stalinpmkBMC-DMK conflict! : Bamakavinar rioting against the Chief Minister!
ShareTweetSendShare
Previous Post

வீணான ரூ.89 கோடி! : வெள்ளத்தில் மிதக்கும் பட்டாலியன் அலுவலகம்!

Next Post

தொடர் கனமழை காரணமாக மழை நீரில் மூழ்கிய உப்பளங்கள்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies