வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது : அதிருப்தியில் இந்தியா - சிறப்பு கட்டுரை!
Jun 7, 2025, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது : அதிருப்தியில் இந்தியா – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்கான் அமைப்பின் துறவியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்க தேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டு பிரச்சனை அரசு எதிர்ப்பு போராட்டமாக நாடெங்கும் பரவியது. இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி,பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து, வங்க தேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது  யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றது. அப்போதிருந்து, வங்கதேசத்தில் வாழும் 8 சதவீத  சிறுபான்மை இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.  தொடர்ச்சியாக பல இந்துக் கோயில்கள் இடிக்கப் பட்டன. இந்துக்கள் மீது சுமார்  200 க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்துக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தீ வைக்கப் பட்டன.

வங்க தேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள்  தாக்கப் படுவதை இந்தியா கடுமையாக கண்டித்தது. மேலும் நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் என்று முகமது முகமது  யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், வங்க தேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள   இந்து மத துறவி  சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டார்.  அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி  கைது செய்யப்பட்டதில் இருந்து வங்க தேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத  முகமது  யூனுஸ் அரசு, இஸ்கான் ஒரு  மத அடிப்படைவாத அமைப்பு என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது. கடந்த வியாழக் கிழமை, வங்க தேசத்தில்  இஸ்கானை தடை செய்ய தானாக முன்வந்து உத்தரவு பிறப்பிக்க வங்கதேச உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி வங்க தேச இஸ்கான் அமைப்பின் உறுப்பினரும் அல்ல, செய்தித் தொடர்பாளரும் அல்ல என்றும்,  பிரம்மச்சாரியின் கருத்துகள் எதுவும் இஸ்கானின் கருத்துக்கள் அல்ல என்றும்,  இஸ்கான்  பொதுச் செயலாளர் சாரு சந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிட்டகாங்கில் வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிஃப் உயிரிழப்புக்கு இஸ்கானை தவறாக தொடர்புபடுத்துவதை மறுத்த இஸ்கான்  பொதுச் செயலாளர், நாட்டில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் இஸ்கானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழலில், இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை   உறுதி செய்யுமாறு இந்திய அரசு வங்கதேச அரசை வலியறுத்தி உள்ளது என்று  இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிரதமர் மோடியைச்  சந்தித்து விவாதித்திருக்கிறார்.

எனவே, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே வங்க தேச இந்துக்களுக்கான பாதுகாப்பு குறித்து  முக்கிய அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: ISKCON monk arrestbangaladesh protestSheikh HasinaISKCON monk
ShareTweetSendShare
Previous Post

இஸ்லாமாபாத் முற்றுகை : இம்ரான் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ராணுவம் – சிறப்பு கட்டுரை!

Next Post

கரையை கடந்தும் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் – 48 செ.மீ. கொட்டி தீர்த்த மழை!

Related News

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies