வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது : அதிருப்தியில் இந்தியா - சிறப்பு கட்டுரை!
Oct 26, 2025, 11:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது : அதிருப்தியில் இந்தியா – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்கான் அமைப்பின் துறவியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்க தேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டு பிரச்சனை அரசு எதிர்ப்பு போராட்டமாக நாடெங்கும் பரவியது. இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி,பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து, வங்க தேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது  யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றது. அப்போதிருந்து, வங்கதேசத்தில் வாழும் 8 சதவீத  சிறுபான்மை இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.  தொடர்ச்சியாக பல இந்துக் கோயில்கள் இடிக்கப் பட்டன. இந்துக்கள் மீது சுமார்  200 க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்துக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தீ வைக்கப் பட்டன.

வங்க தேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள்  தாக்கப் படுவதை இந்தியா கடுமையாக கண்டித்தது. மேலும் நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் என்று முகமது முகமது  யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், வங்க தேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள   இந்து மத துறவி  சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டார்.  அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி  கைது செய்யப்பட்டதில் இருந்து வங்க தேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத  முகமது  யூனுஸ் அரசு, இஸ்கான் ஒரு  மத அடிப்படைவாத அமைப்பு என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது. கடந்த வியாழக் கிழமை, வங்க தேசத்தில்  இஸ்கானை தடை செய்ய தானாக முன்வந்து உத்தரவு பிறப்பிக்க வங்கதேச உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி வங்க தேச இஸ்கான் அமைப்பின் உறுப்பினரும் அல்ல, செய்தித் தொடர்பாளரும் அல்ல என்றும்,  பிரம்மச்சாரியின் கருத்துகள் எதுவும் இஸ்கானின் கருத்துக்கள் அல்ல என்றும்,  இஸ்கான்  பொதுச் செயலாளர் சாரு சந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிட்டகாங்கில் வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிஃப் உயிரிழப்புக்கு இஸ்கானை தவறாக தொடர்புபடுத்துவதை மறுத்த இஸ்கான்  பொதுச் செயலாளர், நாட்டில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் இஸ்கானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழலில், இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை   உறுதி செய்யுமாறு இந்திய அரசு வங்கதேச அரசை வலியறுத்தி உள்ளது என்று  இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிரதமர் மோடியைச்  சந்தித்து விவாதித்திருக்கிறார்.

எனவே, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே வங்க தேச இந்துக்களுக்கான பாதுகாப்பு குறித்து  முக்கிய அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: Sheikh HasinaISKCON monkISKCON monk arrestbangaladesh protest
ShareTweetSendShare
Previous Post

இஸ்லாமாபாத் முற்றுகை : இம்ரான் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ராணுவம் – சிறப்பு கட்டுரை!

Next Post

கரையை கடந்தும் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் – 48 செ.மீ. கொட்டி தீர்த்த மழை!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies