சேலத்தில் பெய்த கனழை காரணமாக 50 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்காடு பகுதியில் உருவான வெள்ளப்பெருக்கு ஏரி, குளம், குட்டைகளை நிரப்பி வருவதால் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீராணம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் வேதனையடைந்த விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.