இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது! : கரு.நாகராஜன்
Mar 15, 2026, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது! : கரு.நாகராஜன்

Murugesan M by Murugesan M
Dec 4, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூரில் இந்து மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, வங்கதேச இந்து மீட்பு குழு சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பாஜகவினர் பங்கேற்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக் கோரி முழக்கமிட்டனர்.

போராட்டத்தின்போது பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது என தெரிவித்தார். வங்கதேசத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் இந்துக்கள் தான் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வங்கதேசத்திலுள்ள இந்துக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.

வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளரும், பாஜக பிரமுகருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு யாரும் துணை நிற்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்துக்களுக்காக கைது செய்யப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

போராட்டத்தில் வேலூர் இப்ராஹிம் பங்கெடுத்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், இந்துக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை திமுக அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

இதனையடுத்து, அங்கு கூடியிருந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தை கூட நடத்த முடியாத சூழல் தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: tn bjpWithout IndiaBangladesh would not have come into being! : Karu. Nagarajan
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி : சாலையை மூழ்கடித்தபடி சென்ற வெள்ளம்!

Next Post

இரட்டை இலை சின்னம்! : தேர்தல் ஆணையத்துக்கு கெடு

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies