இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது! : கரு.நாகராஜன்
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது! : கரு.நாகராஜன்

Murugesan M by Murugesan M
Dec 4, 2024, 05:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூரில் இந்து மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, வங்கதேச இந்து மீட்பு குழு சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பாஜகவினர் பங்கேற்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக் கோரி முழக்கமிட்டனர்.

போராட்டத்தின்போது பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், இந்தியா இல்லாவிட்டால் வங்கதேசம் என்ற நாடு உருவாகியிருக்காது என தெரிவித்தார். வங்கதேசத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் இந்துக்கள் தான் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வங்கதேசத்திலுள்ள இந்துக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.

வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளரும், பாஜக பிரமுகருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு யாரும் துணை நிற்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்துக்களுக்காக கைது செய்யப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

போராட்டத்தில் வேலூர் இப்ராஹிம் பங்கெடுத்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், இந்துக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை திமுக அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

இதனையடுத்து, அங்கு கூடியிருந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தை கூட நடத்த முடியாத சூழல் தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: tn bjpWithout IndiaBangladesh would not have come into being! : Karu. Nagarajan
Share
Tweet
SendShare
Previous Post

திருத்தணி : சாலையை மூழ்கடித்தபடி சென்ற வெள்ளம்!

Next Post

இரட்டை இலை சின்னம்! : தேர்தல் ஆணையத்துக்கு கெடு

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies