சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தகராறில் ஈடுபட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சேலம் மாவட்டம் இரும்பாலையிலிருந்து தனியார் பேருந்து ஒன்றும், அரசு பேருந்து ஒன்றும் சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி பயணித்தன.
பயணிகளை யார் ஏற்றுவது என்பதில் போட்டி ஏற்படவே, திருவக்கவுண்டனர் பகுதியில் இரு பேருந்து ஓட்டுநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.