சபரிமலையில் நடை திறந்த 24 நாட்களில், 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறந்தது முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது. தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் நிலையில், சில நாட்களாக அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 4 நாட்களில் மட்டும் 3.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் தரிசனத்துக்காகவும், பிரசாதங்களை வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையில் நடை திறந்த 24 நாட்களில், 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.