பிரபல இசை கலைஞர் டிரம்ஸ் சிவமணி இருமுடி கட்டி வந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார்.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்ஸ் சிவமணி, தனது இசை குழுவினருடன் ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர், தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது, பக்தர்களின் வேண்டுகோளின்பேரில், நடைபந்தல் மேடையில் டிரம்ஸ் இசைத்து பக்தர்களை மகிழ்வித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது உயர்வுக்கு ஐயப்ப சாமியின் அருளே காரணம் என பயபக்தியுடன் தெரிவித்தார்.