ரூ.7.5 கோடி சொத்து : உலகின் பணக்கார பிச்சைக்காரர் - சிறப்பு தொகுப்பு!
Aug 19, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.7.5 கோடி சொத்து : உலகின் பணக்கார பிச்சைக்காரர் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 16, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிச்சை எடுக்கிறவன் எல்லாம் பணக்காரனா இருக்கான் பாரு என்று திரைப்படத்தில் நகைச்சுவையாக சொல்லக் கேட்டிருப்போம். நிஜமாகவே பிச்சை எடுத்து, 7.5 கோடி சொத்துகளுடன் உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரராகி தமது குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் ஒருவர். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? யார் அவர் ? பிச்சை எடுப்பதையே வெற்றிகரமான தொழிலாக அவர் எப்படி மாற்றினார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் முக்கியமான இரு நகரங்கள் என்றால் அது டெல்லியும் மும்பையும் தான். டெல்லி நாட்டின் தலைநகர் என்றால், மும்பை நாட்டின் வர்த்தக தலைநகரமாகும்.

இதில், மும்பையில் மிகவும் முக்கியமான இடங்களில் பிச்சை எடுப்பவர் தான் பாரத் ஜெயின். இவருக்கு இப்போது 54 வயதாகிறது. கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், விடாமல் நாள்தோறும் பாரத் ஜெயின் பிச்சை எடுத்து வருகிறார்.

பிச்சை எடுப்பதை ஒரு வேலையாக செய்யும் பாரத் ஜெயின் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் இடைவேளையின்றி பணி செய்து வருகிறார். பிச்சை எடுப்பதால் பாரத் ஜெயின் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2000 ரூபாயிலிருந்து, அதிக பட்சம் 2,500 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, பிச்சை எடுப்பதன் மூலம், பாரத் ஜெயினின் மாத வருமானம் 75,000 ரூபாய் ஆகும். மேலும், மும்பையில் உள்ள தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதந்தோறும் கூடுதலாக 30,000 ரூபாய் சம்பாதிக்கிறார் பாரத் ஜெயின்.

தனது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வரும் பாரத் ஜெயினின் சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் ஆகும். தனது குடும்பத்திற்கு ஒரு உயர்தர வாழ்க்கையை கொடுத்திருக்கும் பாரத் ஜெயின் 1.4 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி வீடு வைத்திருக்கிறார். தனது இரண்டு மகன்களையும் புகழ்பெற்ற ஒரு கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்கிறார் பாரத் ஜெயின்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த பாரத் ஜெயினுக்குப் பண நெருக்கடியால்,பள்ளிக் கூடம் சென்று கல்வி கற்கும் வாய்ப்பில்லாமல் போனது. வறுமையின் பிடியில் சவாலான வாழ்க்கையைச் சமாளிக்க , கடுமையாக போராடி இருக்கிறார். ஒரு கட்டத்தில், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்திருக்கிறார். விடாமுயற்சி மற்றும் புத்திசாலித்தனமான நிதி மேலாண்மை காரணமாக, இன்றைக்கு, உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் ஆகி உள்ளார்.

வாழ்வில் இந்தளவுக்கு உயர்ந்த பிறகு, தொடர்ந்து பிச்சை எடுப்பதைக் குடும்பத்தினர் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதை ரசிப்பதாகவும், நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்குப் பதிலாக, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதைப் பாரத் ஜெயின் நம்புகிறார். வெற்றி என்பது பணத்தைக் குவிப்பது மட்டுமல்ல, பகிர்ந்து கொள்வதும் ஆகும் என்று சொல்லும் பாரத் ஜெயின், அடிக்கடி கோவில்களுக்கு நன்கொடை அளிப்பதும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவும் செய்கிறார்.

மும்பையில், பாரத் ஜெயின் போலவே, பல பணக்காரப் பிச்சைக்காரர்கள் இந்தியாவில் உள்ளனர் 2019ம் ஆண்டு ரயில் விபத்தில் இறந்து போன பிச்சைக்காரரான புர்ஜு சந்திர ஆசாத், வங்கி வைப்பு நிதியாக 8.77 லட்சம் ரூபாய் மற்றும் ரொக்கமாக சுமார் 1.5 லட்சம் வைத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

மேலும், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருக்கும் சாம்பாஜி காலே மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருக்கும் லக்ஷ்மி தாஸ் ஆகியோரும் பணக்கார பிச்சைக்காரர்களாக உள்ளனர்.

பிச்சை எடுப்பது அவமானம் அல்ல. வேலைக்குப் போவதை விட பிச்சை எடுப்பது சிறந்தது என்று பாரத் ஜெயின் நிரூபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Tags: mumbairichest beggar i7.5 crores assestBharat JainChhatrapati Shivaji Maharaj Railway StationAzad Maidan.
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, இன்று தாக்கல்?

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies