ரூ.7.5 கோடி சொத்து : உலகின் பணக்கார பிச்சைக்காரர் - சிறப்பு தொகுப்பு!
May 4, 2026, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.7.5 கோடி சொத்து : உலகின் பணக்கார பிச்சைக்காரர் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிச்சை எடுக்கிறவன் எல்லாம் பணக்காரனா இருக்கான் பாரு என்று திரைப்படத்தில் நகைச்சுவையாக சொல்லக் கேட்டிருப்போம். நிஜமாகவே பிச்சை எடுத்து, 7.5 கோடி சொத்துகளுடன் உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரராகி தமது குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் ஒருவர். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? யார் அவர் ? பிச்சை எடுப்பதையே வெற்றிகரமான தொழிலாக அவர் எப்படி மாற்றினார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் முக்கியமான இரு நகரங்கள் என்றால் அது டெல்லியும் மும்பையும் தான். டெல்லி நாட்டின் தலைநகர் என்றால், மும்பை நாட்டின் வர்த்தக தலைநகரமாகும்.

இதில், மும்பையில் மிகவும் முக்கியமான இடங்களில் பிச்சை எடுப்பவர் தான் பாரத் ஜெயின். இவருக்கு இப்போது 54 வயதாகிறது. கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், விடாமல் நாள்தோறும் பாரத் ஜெயின் பிச்சை எடுத்து வருகிறார்.

பிச்சை எடுப்பதை ஒரு வேலையாக செய்யும் பாரத் ஜெயின் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் இடைவேளையின்றி பணி செய்து வருகிறார். பிச்சை எடுப்பதால் பாரத் ஜெயின் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2000 ரூபாயிலிருந்து, அதிக பட்சம் 2,500 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, பிச்சை எடுப்பதன் மூலம், பாரத் ஜெயினின் மாத வருமானம் 75,000 ரூபாய் ஆகும். மேலும், மும்பையில் உள்ள தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதந்தோறும் கூடுதலாக 30,000 ரூபாய் சம்பாதிக்கிறார் பாரத் ஜெயின்.

தனது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வரும் பாரத் ஜெயினின் சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் ஆகும். தனது குடும்பத்திற்கு ஒரு உயர்தர வாழ்க்கையை கொடுத்திருக்கும் பாரத் ஜெயின் 1.4 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி வீடு வைத்திருக்கிறார். தனது இரண்டு மகன்களையும் புகழ்பெற்ற ஒரு கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்கிறார் பாரத் ஜெயின்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த பாரத் ஜெயினுக்குப் பண நெருக்கடியால்,பள்ளிக் கூடம் சென்று கல்வி கற்கும் வாய்ப்பில்லாமல் போனது. வறுமையின் பிடியில் சவாலான வாழ்க்கையைச் சமாளிக்க , கடுமையாக போராடி இருக்கிறார். ஒரு கட்டத்தில், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்திருக்கிறார். விடாமுயற்சி மற்றும் புத்திசாலித்தனமான நிதி மேலாண்மை காரணமாக, இன்றைக்கு, உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் ஆகி உள்ளார்.

வாழ்வில் இந்தளவுக்கு உயர்ந்த பிறகு, தொடர்ந்து பிச்சை எடுப்பதைக் குடும்பத்தினர் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதை ரசிப்பதாகவும், நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்குப் பதிலாக, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதைப் பாரத் ஜெயின் நம்புகிறார். வெற்றி என்பது பணத்தைக் குவிப்பது மட்டுமல்ல, பகிர்ந்து கொள்வதும் ஆகும் என்று சொல்லும் பாரத் ஜெயின், அடிக்கடி கோவில்களுக்கு நன்கொடை அளிப்பதும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவும் செய்கிறார்.

மும்பையில், பாரத் ஜெயின் போலவே, பல பணக்காரப் பிச்சைக்காரர்கள் இந்தியாவில் உள்ளனர் 2019ம் ஆண்டு ரயில் விபத்தில் இறந்து போன பிச்சைக்காரரான புர்ஜு சந்திர ஆசாத், வங்கி வைப்பு நிதியாக 8.77 லட்சம் ரூபாய் மற்றும் ரொக்கமாக சுமார் 1.5 லட்சம் வைத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

மேலும், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருக்கும் சாம்பாஜி காலே மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருக்கும் லக்ஷ்மி தாஸ் ஆகியோரும் பணக்கார பிச்சைக்காரர்களாக உள்ளனர்.

பிச்சை எடுப்பது அவமானம் அல்ல. வேலைக்குப் போவதை விட பிச்சை எடுப்பது சிறந்தது என்று பாரத் ஜெயின் நிரூபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Tags: Chhatrapati Shivaji Maharaj Railway StationAzad Maidan.mumbairichest beggar i7.5 crores assestBharat Jain
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, இன்று தாக்கல்?

Related News

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies