உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்! : மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  
Jan 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்! : மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும் என மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற 5-வது இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்று உரையாற்றினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக் காட்டியவர், இந்தியா  இத்துறையில் புரட்சியை  ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாகவும் மாறி வருகிறது என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தற்போது தூய்மை எரிசக்தித் துறையில் உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று ஜோஷி கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளை பலவேறு நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முன்முயற்சியின் கீழ், 120 நாடுகள் கையெழுத்திட்டுள்ள  உலகளாவிய ஒத்துழைப்புக்கான முறையான அமைப்பாக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.

“நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், இந்தியா சுமார் 15 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கியுள்ளது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 7.54 ஜிகாவாட் அளவை விட இரு மடங்காகும்” என்று கூறினார்.

புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி துறையில் இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறன் 214 ஜிகாவாட்டை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 14%  அதிகரிப்பைக் குறிக்கிறது என்று கூறினார்.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு எடுத்துள்ள பல முக்கிய நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

2025-26 ம் ஆண்டுக்குள் 38 ஜிகாவாட் ஒட்டுமொத்த திறன் கொண்ட 50 சூரியசக்தி பூங்காக்களை அமைப்பதற்கான தற்போதைய முன்முயற்சி குறித்து அவர் குறிப்பிட்டார்.

Tags: Central MinisterIndia to become world's renewable energy hub! : Union Minister Pralhad Joshi
ShareTweetSendShare
Previous Post

அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா? – எச். ராஜா கடும் கண்டனம்!

Next Post

காங். ஆட்சியில் விலைவாசி உயர்வு 10.2 சதவீதமாக இருந்தது! : நிர்மலா சீதாராமன்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies