அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா? - எச். ராஜா கடும் கண்டனம்!
Aug 7, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா? – எச். ராஜா கடும் கண்டனம்!

தமிழக அரசுக்கு எச். ராஜா கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா?, தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவையில் 58 அப்பாவி ஹிந்துக்களை வெடிகுண்டு வைத்து கொடூரமாக படுகொலை செய்த குண்டுவெடிப்பு குற்றவாளி பயங்கரவாதி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்த தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிப்பது, பயங்கரவாதிகளை நல்லவர்களாக சித்தரிக்க முயலும் செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வங்க தேசத்தில் தொடர் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்துக்களுக்காக தற்போது காங்கிரஸ் கட்சி கூட குரல் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வங்க தேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுப்பது கூட கண்துடைப்பு நாடகமாக இருந்தாலும் இதுவரை திமுக வங்க தேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவே இல்லை.

வங்க தேசத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்துக்களுக்காக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னால் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயக முறையில் ஹிந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது அதற்கு மறுப்பு தெரிவித்து, அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்தது தமிழக காவல்துறை.

கோவை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த ஹிந்துக்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அனுமதி மறுத்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஹிந்து இயக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது தமிழக காவல்துறை. தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் அவர்களின் இறுதி ஊர்வத்தை நடத்தவும், அவரது படுகொலைக்கு நீதி கேட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஹிந்து இயக்கங்கள் சார்பாக மெளன ஊர்வலம் நடத்தவும் ஹிந்து இயக்கங்கள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரிய போது அக்கோரிக்கையை நிராகரித்து அன்று அனுமதி மறுத்தது தமிழக காவல்துறை.

ஆனால் கோவையில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தி 58 அப்பாவி ஹிந்துக்களை படுகொலை செய்து பலர் உடல் ஊனமுறுவதற்கும் காரணமான மிகக்கொடிய பயங்கரவாதி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிப்பதிருப்பதை பார்க்கும் போது தமிழக அரசும், காவல்துறையும் பயங்கரவாதிகள் விஷயத்தில் தொடர்ந்து மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஹிந்துக்கள் அனைவருக்கும் ஏற்படுத்துகிறது.

கோவை குண்டுவெடிப்ப குற்றவாளி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதற்கு காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்பதே ஹிந்துக்கள் அனைவரின் கோரிக்கையாகும். தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக இவ்விஷயத்தில் நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: h rajatn bjpCriticism of AlUma Pasha's funeral? - H. King condemned!
Share
Tweet
SendShare
Previous Post

சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

Next Post

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்! : மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies