நாளை பெசா சட்டம் குறித்த தேசிய பயிலரங்கம்!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை பெசா சட்டம் குறித்த தேசிய பயிலரங்கம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை பெசா சட்டம் குறித்த தேசிய பயிலரங்கம்   நடைபெறவுள்ளது.

பஞ்சாயத்துகள் (ஷெட்யூல்ட் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996 (பெசா சட்டம்) பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை  ராஞ்சியில்  நாளை தேசிய பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பெசா சட்டம் குறித்த பயிலரங்கில் ஜார்க்கண்ட் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகப் பணிகள் துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ், ஷெட்யூல்ட் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெசாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுவார். இந்தச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைக்கிறார்.

பெசா சட்டத்திற்கு ஏற்ப ஜார்க்கண்ட் தனது பெசா விதிகளை இறுதி செய்யும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, சட்டத்தின் நோக்கங்கள், சாதனைகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்து கவனம் செலுத்தும் அதே வேளையில்,  உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதில்  விமர்சன ரீதியான பங்கு குறித்த விவாதங்களில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை ஈடுபடுத்தும் ஒரு முக்கிய தளமாகவும் செயல்படும்.

ஒரு நாள் முழுவதும் நடைபெறும் பெசா பயிலரங்கு அர்த்தமுள்ள உரையாடலை எளிதாக்குவதற்கும், இலக்கு நிர்ணயக்கப்பட்ட  சமூகங்களுக்கு பயனளிக்கும் செயல்பாட்டு விளைவுகளை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட பகுதிகளில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் பெசாவின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும், பெசாவின் சாராம்சம் மற்றும் தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு குறும்படத் திரையிடலும் ஒரு பாடலும் இந்த நிகழ்வில்  இடம்பெறும்.

முக்கிய உரைகள், பழங்குடி மரபுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்த குழு விவாதங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார விளக்கக்காட்சிகள் ஆகியவையும் இந்த நிகழ்வில்  இடம்பெறும்.

பெசா சட்டத்தை வலுவாக அமல்படுத்துவதன் மூலம் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குத் தெளிவான பாதையை வகுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்தப் பயிலரங்கு நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய பத்து பெசா மாநிலங்கள் அந்தந்த பிராந்தியங்களில் பயனுள்ள விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: National workshop on Pesa law tomorrow!
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல்! : சுற்றித்திரியும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

Next Post

உரிமையாளரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த பாமக எம்எல்ஏ!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies