நாளை பெசா சட்டம் குறித்த தேசிய பயிலரங்கம்!
Jul 30, 2026, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை பெசா சட்டம் குறித்த தேசிய பயிலரங்கம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை பெசா சட்டம் குறித்த தேசிய பயிலரங்கம்   நடைபெறவுள்ளது.

பஞ்சாயத்துகள் (ஷெட்யூல்ட் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996 (பெசா சட்டம்) பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை  ராஞ்சியில்  நாளை தேசிய பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பெசா சட்டம் குறித்த பயிலரங்கில் ஜார்க்கண்ட் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகப் பணிகள் துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ், ஷெட்யூல்ட் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெசாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுவார். இந்தச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைக்கிறார்.

பெசா சட்டத்திற்கு ஏற்ப ஜார்க்கண்ட் தனது பெசா விதிகளை இறுதி செய்யும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, சட்டத்தின் நோக்கங்கள், சாதனைகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்து கவனம் செலுத்தும் அதே வேளையில்,  உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதில்  விமர்சன ரீதியான பங்கு குறித்த விவாதங்களில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை ஈடுபடுத்தும் ஒரு முக்கிய தளமாகவும் செயல்படும்.

ஒரு நாள் முழுவதும் நடைபெறும் பெசா பயிலரங்கு அர்த்தமுள்ள உரையாடலை எளிதாக்குவதற்கும், இலக்கு நிர்ணயக்கப்பட்ட  சமூகங்களுக்கு பயனளிக்கும் செயல்பாட்டு விளைவுகளை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட பகுதிகளில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் பெசாவின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும், பெசாவின் சாராம்சம் மற்றும் தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு குறும்படத் திரையிடலும் ஒரு பாடலும் இந்த நிகழ்வில்  இடம்பெறும்.

முக்கிய உரைகள், பழங்குடி மரபுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்த குழு விவாதங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார விளக்கக்காட்சிகள் ஆகியவையும் இந்த நிகழ்வில்  இடம்பெறும்.

பெசா சட்டத்தை வலுவாக அமல்படுத்துவதன் மூலம் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குத் தெளிவான பாதையை வகுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்தப் பயிலரங்கு நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய பத்து பெசா மாநிலங்கள் அந்தந்த பிராந்தியங்களில் பயனுள்ள விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: National workshop on Pesa law tomorrow!
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல்! : சுற்றித்திரியும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

Next Post

உரிமையாளரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த பாமக எம்எல்ஏ!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies