சென்னை, கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலையை குறிக்கும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.