இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கேட்கும் வங்கதேச அரசு - சிறப்பு தொகுப்பு!
May 18, 2025, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கேட்கும் வங்கதேச அரசு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வங்கதேசம், தற்போது  இந்தியாவிடம் உதவி கேட்டு கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளது. சொந்த மக்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில், இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து நாட்டை விட்டு வெளியேற்றியதில் இருந்து வங்கதேசம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, வங்க தேசம் உணவுப் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கிறது. சமீப வாரங்களாக, அந்நாட்டில் கடுமையான உணவு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம், வங்க தேச உணவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன் படி, நாட்டில் 1.1148 பில்லியன் டன் உணவு தானியங்கள் மட்டுமே இருப்பில் உள்ளன. இதில் 7 லட்சத்து 42 ஆயிரம் டன்னுக்கு அரிசி உள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை 2.6625 டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் அரிசி மட்டும் 54,170 டன் அளவாகும். தற்போது எப்போதும் இல்லாத வகையில் வங்கதேசத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தை பொருத்தவரை அரசு சார்பில் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் ரேஷன் திட்டம் உள்ளது. வங்க தேசத்தில் பிரதானமான உணவு அரிசியாகும். வங்க தேசத்தின் உணவு இறக்குமதியில் அரிசியே முதலிடத்தில் உள்ளது. வங்க தேசத்துக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக மியான்மர் உள்ளது.

வங்க தேச வெளியுறவு அமைச்சர், மியான்மரில் இயங்கிவரும் அரக்கான் இராணுவத்தை தங்கள் நாடு அங்கீகரிக்காது என்றும், வங்கதேசத்தில் வசிக்கும் சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனாலேயே, அரக்கான் இராணுவம் வங்க தேசத்தை உணவு பற்றாகுறையில் தள்ளியுள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் உள்ள ஆயுதக் குழுவான அரக்கான் ராணுவம், சமீபத்தில் மியான்மர்-வங்கதேச எல்லையில் உள்ள முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த வாரத்தில், வங்க தேச எல்லையில் உள்ள கடைசி மியான்மர் இராணுவ புறக்காவல் நிலையத்தை அரக்கான் இராணுவம் கைப்பற்றியது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 270 கிலோமீட்டர் எல்லையை தன்வசமாகியது. அரக்கான் இராணுவம் மோங்டோவின் முக்கிய துறைமுகத்தையும், முக்கிய சுங்க சாவடிகளையும் கைப்பற்றி விட்டது. அதனால், மியான்மரில் இருந்தும் வங்க தேசத்துக்கு அரிசி ஏற்றுமதி முற்றிலுமாக தடுக்கப் பட்டு விட்டது.

சமீபத்தில், வங்கதேசத்தின் நிதி ஆலோசகர் சலிஹுதீன் அஹமது தலைமையில் பொருளாதார விவகார ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி இந்தியாவில் உள்ள பகாடியா பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஒரு டன் அரிசியை 456.67 அமெரிக்க டாலருக்கு வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.

வங்கதேசம் இந்திய தனியார் நிறுவனத்திடம் அரிசி கேட்டு இருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு பெரும் அளவு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யும்போது அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

இந்தியாவுக்கு எதிரான மோதல் போக்கைக் கடை பிடித்து வரும் வங்க தேசத்துக்கு இந்தியா அரிசியை அனுப்ப அனுமதி வழங்குமா என்ற கேள்வியும் வங்க தேச அரசுக்கு உள்ளது. ஒருவேளை அரிசி வழங்காவிட்டால் அது வங்கதேசத்துக்கு பெரிய பிரச்சனையாக மாறும். ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் வங்க தேசத்துக்கு உணவு பற்றாக்குறை மேலும் பிரச்சனையாகும். எனவே தான், 50,000 டன் அரிசி வழங்கும்படி இந்தியாவிடம் வங்க தேசம் கையேந்தி நிற்கிறது.

Tags: BangladeshSheikh Hasinafood items shortageMyanmar
ShareTweetSendShare
Previous Post

நடிகர்களை குறிவைக்கும் ரேவந்த் ரெட்டி அரசு – பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றச்சாட்டு!

Next Post

முதல் தகவல் அறிக்கையை கசிய விட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Related News

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies