வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளை கடந்தும் குற்றவாளிகள் ஒருவர் கூட கைதுசெய்யப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வின் வழக்கை காவல்துறை அலட்சியமாக மேற்கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலம் கலந்த குடிநீரை அருந்திய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றுடன் இரண்டாண்டுகள் முடிவடைந்திருக்கிறது.

இருப்பினும் மனித நாகரீகமற்ற இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருப்பது புதுக்கோட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட புலனாய்வுக்குழு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலிசாருக்கு மாற்றப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நேரில் விசாரணை, டி என் ஏ பரிசோதனை, உண்மை கண்டறியும் சோதனை என அனைத்து விதமான சோதனைகளும் நடைபெற்ற பின்னரும் ஒரு குற்றவாளி கூட இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லையா ? அல்லது குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா என்ற கேள்வியையையும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எழுப்புகின்றனர்.

ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறையை வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் கைது செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

வேங்கைவயல் விவகாரத்தில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, பயங்கரவாத்தை கையாண்டிருக்கும் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ShareTweetSendShare
Previous Post

மந்த கதியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies