வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு - சிறப்பு தொகுப்பு!
Aug 20, 2025, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 27, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளை கடந்தும் குற்றவாளிகள் ஒருவர் கூட கைதுசெய்யப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வின் வழக்கை காவல்துறை அலட்சியமாக மேற்கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலம் கலந்த குடிநீரை அருந்திய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றுடன் இரண்டாண்டுகள் முடிவடைந்திருக்கிறது.

இருப்பினும் மனித நாகரீகமற்ற இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருப்பது புதுக்கோட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட புலனாய்வுக்குழு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலிசாருக்கு மாற்றப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நேரில் விசாரணை, டி என் ஏ பரிசோதனை, உண்மை கண்டறியும் சோதனை என அனைத்து விதமான சோதனைகளும் நடைபெற்ற பின்னரும் ஒரு குற்றவாளி கூட இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லையா ? அல்லது குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா என்ற கேள்வியையையும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எழுப்புகின்றனர்.

ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறையை வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் கைது செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

வேங்கைவயல் விவகாரத்தில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, பயங்கரவாத்தை கையாண்டிருக்கும் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ShareTweetSendShare
Previous Post

மந்த கதியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies