வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு - சிறப்பு தொகுப்பு!
Jun 14, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளை கடந்தும் குற்றவாளிகள் ஒருவர் கூட கைதுசெய்யப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வின் வழக்கை காவல்துறை அலட்சியமாக மேற்கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலம் கலந்த குடிநீரை அருந்திய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றுடன் இரண்டாண்டுகள் முடிவடைந்திருக்கிறது.

இருப்பினும் மனித நாகரீகமற்ற இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருப்பது புதுக்கோட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட புலனாய்வுக்குழு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலிசாருக்கு மாற்றப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நேரில் விசாரணை, டி என் ஏ பரிசோதனை, உண்மை கண்டறியும் சோதனை என அனைத்து விதமான சோதனைகளும் நடைபெற்ற பின்னரும் ஒரு குற்றவாளி கூட இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லையா ? அல்லது குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா என்ற கேள்வியையையும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எழுப்புகின்றனர்.

ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறையை வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் கைது செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

வேங்கைவயல் விவகாரத்தில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, பயங்கரவாத்தை கையாண்டிருக்கும் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ShareTweetSendShare
Previous Post

மந்த கதியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies