வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு - சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளை கடந்தும் குற்றவாளிகள் ஒருவர் கூட கைதுசெய்யப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வின் வழக்கை காவல்துறை அலட்சியமாக மேற்கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலம் கலந்த குடிநீரை அருந்திய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றுடன் இரண்டாண்டுகள் முடிவடைந்திருக்கிறது.

இருப்பினும் மனித நாகரீகமற்ற இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருப்பது புதுக்கோட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட புலனாய்வுக்குழு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலிசாருக்கு மாற்றப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நேரில் விசாரணை, டி என் ஏ பரிசோதனை, உண்மை கண்டறியும் சோதனை என அனைத்து விதமான சோதனைகளும் நடைபெற்ற பின்னரும் ஒரு குற்றவாளி கூட இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லையா ? அல்லது குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா என்ற கேள்வியையையும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எழுப்புகின்றனர்.

ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறையை வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் கைது செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

வேங்கைவயல் விவகாரத்தில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, பயங்கரவாத்தை கையாண்டிருக்கும் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ShareTweetSendShare
Previous Post

மந்த கதியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies