நெருக்கடியில் முகமது யூனுஸ் : நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா? சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெருக்கடியில் முகமது யூனுஸ் : நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Dec 30, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை இந்தியா நிராகரிக்க முடியுமா ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த மாதம், இடைக்கால அரசு 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முகமது யூனுஸ், ஹசீனாவை நாடு கடத்தப் போவதாக அறிவித்தார்.

மேலும், ஷேக் ஹசீனா ஆட்சியில் நடந்த ஒவ்வொரு கொலையிலும் நீதியை உறுதிப்படுத்த போவதாகவும், தப்பியோடிய சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பவேண்டும் என இந்தியாவிடம் கேட்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

அரசுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதனையடுத்து, இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ், ஹசீனாவின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்குக் கொண்டு வர நடத்தப்பட்ட போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20,000 பேர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டிருந்தார்.

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 42 கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகள் தொடரப் பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்குப் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் செய்ததாக பல முன்னாள் அமைச்சர்கள், அரசு ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில், வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹொசைன் “நீதித் துறை நடவடிக்கைக்காக ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திரும்ப அழைத்து வர விரும்புவதாகவும், இது தொடர்பாக இந்திய அரசுக்கு வாய்மொழியாக குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, வங்கதேச உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், அதற்கான செயல்முறை தொடங்கப் பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

அதே நேரத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இனப்படுகொலை செய்து வருகிறது என்றும், சிறுபான்மையினரை, குறிப்பாக இந்துக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, டாக்கா சென்று திரும்பிய சில நாட்களுக்குள் பிறகு ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரிக்கை வந்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனா நாடு கடத்தல் கோரிக்கை தொடர்பாக வங்கதேச தூதரகத்திடம் இருந்து கடிதம் வந்ததை உறுதிப்படுத்தியுள்ள மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த விஷயத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

எல்லை தாண்டிய வன்முறை மற்றும் தீவிரவாதத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் இடையே 2013ம் ஆண்டில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் கைதிகளை ஒப்படைப்பதற்காக கொண்டு வரப்பட்ட முக்கிய திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக அரசியல் பிரச்சினைகளின் போது நாடு கடத்தப்படுவதை இந்த ஒப்பந்தம் நிராகரிக்கிறது.

எனவே, முகமது யூனுஸ் அரசின் ஒப்படைப்பு கோரிக்கையை எதிர்த்து ஷேக் ஹசீனா நீதிமன்றத்தை அணுகவும் வாய்ப்பிருக்கிறது. அதுவரை ஷேக் ஹசீனா இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Tags: former Prime Minister Sheikh Hasina.Bangladesh's interim governmentextraditeIndiaBangladeshSheikh HasinaMohammad Yunus
ShareTweetSendShare
Previous Post

ஆளுநரை சந்தித்த விஜய்! – அண்ணாமலை வரவேற்பு

Next Post

பாகிஸ்தான் vs தலிபான் போர்! : இந்தியாவுக்கு லாபமா?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies