சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 29, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிர்வாக இயக்குனரின் போலி WhatsApp-லிருந்து தகவல் அனுப்பி, குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வங்கி 56 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் எப்படி, எங்கு நடந்தது? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

பெங்களுருவில் வசிக்கும்  பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். திடீரென்று, அவருக்கு ஒரு மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது. அதில் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் லோகோ மற்றும் MD-ன் படம் இருந்ததால், அந்த செய்தியை நம்பிவிட்டார்.

வந்த செய்தி இது தான். ஒரு திட்டத்தை இறுதி செய்துள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகையாக 56 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் நிறுவன MD தெரிவித்திருந்தார்.

இந்த வாட்ஸ்அப் செய்தி உண்மையானது என்று நம்பி, அனுப்பியவர் வழங்கிய இரண்டு வங்கி கணக்குகளுக்கு 56 லட்சத்தை மாற்றியுள்ளார் அந்த பெண். பரிவர்த்தனையை முடித்த பிறகு, சந்தேகங்கள் எழுந்ததால், MD-க்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். MD அந்த மொபைல் எண் தன்னுடையது இல்லை என்று சொன்னபோது தான் தான் ஏமாற்றப்பட்டது அனுப்பிரியாவுக்கு புரிந்தது. உடனே பெங்களூருவின் தென்கிழக்கு குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குமார் கொடுத்த தகவலின் படி, திட்டமிட்டு தனியார் நிறுவனக் கணக்காளரை ஏமாற்றி, 56 லட்சத்தைப் பறித்ததாக 23 வயது பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை தென்கிழக்கு பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிரிஷ்மா தலைமையிலான கும்பலின் வழிகாட்டுதலின்படி கணக்கைத் தொடங்கியதை ஒப்புக்கொண்ட குமார், தனது கணக்கில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய 15,000 ரூபாய் வரை தந்ததாக தெரிவித்திருக்கிறார்.

விசாரணையில், கடந்த 6 மாதங்களாக இந்த சைபர் மோசடியை நடத்தியதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட கிரிஷ்மா ரெட்டி, ஒரு பட்டய கணக்காளராகவும் உதவி இயக்குனராகவும், தெலுங்கு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணி புரிந்து வருகிறார். கிரிஷ்மாவிடமிருந்து, விலையுர்ந்த ஆடி ஏ4 கார், மொபைல் போன்கள் மற்றும் 56,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கிரிஷ்மாவின் வங்கி கணக்குகளை முடக்கி, 5 லட்சத்தை மீட்டுள்ளனர். மீதமுள்ள 50 லட்சத்தை மீட்கும் முயற்சிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு விசித்திரமான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை நிதி அதிகாரிகளான CFO க்கள் மற்றும் தலைமை கணக்கு அதிகாரிகள் CAOக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. MD யிடம் கிராஸ் செக் செய்யாமல், முதலாளியின் வாட்ஸ்அப் உத்தரவுகளின் அடிப்படையில் நிதியை அனுப்ப கூடாது என்பது தான் இந்த செய்தியின் பாடம் .

Tags: KumarSouth East Cyber ​​Crime Policeprivate companyBengalurucyber crimefake WhatsApp messageChief Accountant
ShareTweetSendShare
Previous Post

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies