சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!
Aug 7, 2026, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 29, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிர்வாக இயக்குனரின் போலி WhatsApp-லிருந்து தகவல் அனுப்பி, குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வங்கி 56 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் எப்படி, எங்கு நடந்தது? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

பெங்களுருவில் வசிக்கும்  பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். திடீரென்று, அவருக்கு ஒரு மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது. அதில் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் லோகோ மற்றும் MD-ன் படம் இருந்ததால், அந்த செய்தியை நம்பிவிட்டார்.

வந்த செய்தி இது தான். ஒரு திட்டத்தை இறுதி செய்துள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகையாக 56 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் நிறுவன MD தெரிவித்திருந்தார்.

இந்த வாட்ஸ்அப் செய்தி உண்மையானது என்று நம்பி, அனுப்பியவர் வழங்கிய இரண்டு வங்கி கணக்குகளுக்கு 56 லட்சத்தை மாற்றியுள்ளார் அந்த பெண். பரிவர்த்தனையை முடித்த பிறகு, சந்தேகங்கள் எழுந்ததால், MD-க்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். MD அந்த மொபைல் எண் தன்னுடையது இல்லை என்று சொன்னபோது தான் தான் ஏமாற்றப்பட்டது அனுப்பிரியாவுக்கு புரிந்தது. உடனே பெங்களூருவின் தென்கிழக்கு குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குமார் கொடுத்த தகவலின் படி, திட்டமிட்டு தனியார் நிறுவனக் கணக்காளரை ஏமாற்றி, 56 லட்சத்தைப் பறித்ததாக 23 வயது பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை தென்கிழக்கு பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிரிஷ்மா தலைமையிலான கும்பலின் வழிகாட்டுதலின்படி கணக்கைத் தொடங்கியதை ஒப்புக்கொண்ட குமார், தனது கணக்கில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய 15,000 ரூபாய் வரை தந்ததாக தெரிவித்திருக்கிறார்.

விசாரணையில், கடந்த 6 மாதங்களாக இந்த சைபர் மோசடியை நடத்தியதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட கிரிஷ்மா ரெட்டி, ஒரு பட்டய கணக்காளராகவும் உதவி இயக்குனராகவும், தெலுங்கு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணி புரிந்து வருகிறார். கிரிஷ்மாவிடமிருந்து, விலையுர்ந்த ஆடி ஏ4 கார், மொபைல் போன்கள் மற்றும் 56,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கிரிஷ்மாவின் வங்கி கணக்குகளை முடக்கி, 5 லட்சத்தை மீட்டுள்ளனர். மீதமுள்ள 50 லட்சத்தை மீட்கும் முயற்சிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு விசித்திரமான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை நிதி அதிகாரிகளான CFO க்கள் மற்றும் தலைமை கணக்கு அதிகாரிகள் CAOக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. MD யிடம் கிராஸ் செக் செய்யாமல், முதலாளியின் வாட்ஸ்அப் உத்தரவுகளின் அடிப்படையில் நிதியை அனுப்ப கூடாது என்பது தான் இந்த செய்தியின் பாடம் .

Tags: KumarSouth East Cyber ​​Crime Policeprivate companyBengalurucyber crimefake WhatsApp messageChief Accountant
Share
Tweet
SendShare
Previous Post

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies