கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகள் பதற்றமடைந்தனர்.
முதுநகர் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு இருப்பதற்கான தடயங்கள் ஏதும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது.