ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!
Sep 18, 2025, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!

Web Desk by Web Desk
Dec 30, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள திட்டங்களின் பெயரில், பொதுமக்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘மகிளா சம்மன் யோஜனா’ என்ற திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கினாலும், செயல்பாட்டுக்கு வரவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகை 2 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தப்படுமென ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.

அதேபோல், டெல்லியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம்களை, அரவிந்த் கெஜ்ரிவாலும், டெல்லி முதலமைச்சர் அதிஷியும் அண்மையில் நடத்தினர். ஆனால், இதுபோன்ற திட்டங்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் தங்களது தகவல்களை தந்து ஏமாற வேண்டாமென டெல்லியின் மகளிர் மேம்பாட்டுத்துறையும், சுகாதாரத்துறையும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதாக டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் புகார் அளித்தார். மேலும் அவர், டெல்லி தேர்தலையொட்டி பஞ்சாப்பிலிருந்து பணம் கொண்டு வரப்படுவதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளை பஞ்சாப் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி தலைமை செயலாளர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும், லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: aam aadmi partyCongress complains to the lieutenant governor about Aam Aadmi!
ShareTweetSendShare
Previous Post

வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற குழு!

Related News

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

பாலிவுட் நடிகை  திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies