ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!
Jun 15, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!

Murugesan M by Murugesan M
Dec 30, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள திட்டங்களின் பெயரில், பொதுமக்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘மகிளா சம்மன் யோஜனா’ என்ற திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கினாலும், செயல்பாட்டுக்கு வரவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகை 2 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தப்படுமென ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.

அதேபோல், டெல்லியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம்களை, அரவிந்த் கெஜ்ரிவாலும், டெல்லி முதலமைச்சர் அதிஷியும் அண்மையில் நடத்தினர். ஆனால், இதுபோன்ற திட்டங்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் தங்களது தகவல்களை தந்து ஏமாற வேண்டாமென டெல்லியின் மகளிர் மேம்பாட்டுத்துறையும், சுகாதாரத்துறையும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதாக டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் புகார் அளித்தார். மேலும் அவர், டெல்லி தேர்தலையொட்டி பஞ்சாப்பிலிருந்து பணம் கொண்டு வரப்படுவதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளை பஞ்சாப் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி தலைமை செயலாளர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும், லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: aam aadmi partyCongress complains to the lieutenant governor about Aam Aadmi!
ShareTweetSendShare
Previous Post

வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற குழு!

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies