புத்தாண்டை ஒட்டி சென்னையில் அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புத்தாண்டை ஒட்டி சென்னையில் காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் 425 இடங்களில் தற்காலிக வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், வாகனங்களை அதிவேகமாக இயக்கிய இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.