கோபுர கலசத்தில் இரிடியம் : END CARD இல்லாமல் தொடரும் மோசடி - சிறப்பு தொகுப்பு!
Aug 6, 2025, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோபுர கலசத்தில் இரிடியம் : END CARD இல்லாமல் தொடரும் மோசடி – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 3, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் அருகே கோபுர கலசத்தில் இரிடியம் உள்ளதாகக் கூறி பண மோசடி மற்றும் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

இரிடியம் எளிதில் காணக்கிடைக்காத உலோகம். இது வீட்டில் இருந்தால் செல்வம் செழிக்கும், இரிடியத்தை வாங்கி வெளிநாட்டில் விற்றால் கோடிகளில் புரளலாம் போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி லட்சத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் ஏராளம்.

சதுரங்க வேட்டை படத்திலும் இதே பாணியில் ஒரு கும்பல் பணம் படைத்தவர்களை அணுகி, கோபுர கலசம், அரிசி போன்றவற்றால் சித்து வேலைகளை காட்டி, பண மோசடியில் ஈடுபடும் காட்சிகளை நாம் கட்டாயம் பார்த்திருப்போம்…

இதே டெக்னிக்கை பயன்படுத்தி கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் பண மோசடி மற்றும் கார் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டிப்டாப் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணாமலையார் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு அறிமுகமான ராஜு என்கிற ராஜசேகர் என்பவர் தன்னிடம் இரு கோபுர கலசங்கன் இரிடியம் இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரு கலசத்திற்கு 5 லட்சம் வீதம் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், இரிடியத்தையும், அதனுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என விக்னேஷிடம் பல ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார்.

அப்போது தனது பட்ஜெட்டுக்கு 10 லட்சமெல்லாம் ஜாஸ்தி எனக்கூறி விக்னேஷ் நழுவப் பார்க்க, அவரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளார் ராஜு. பாதிக்கப்பட்ட விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காரில் இரு கோபுர கலசங்களுடன் சென்ற நபரை வாகன சோதனையின்போது மடக்கி பிடித்தனர்.

டிப்டாப் உடையில் சிக்கிய அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இரிடியம் வாங்கி விற்றால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற பேராசையால் மற்றொரு நபரிடம் ராஜு 8 லட்சம் ரூபாயை இழந்தது தெரியவந்தது. அதே மோசடியை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட திட்டமிட்ட ராஜு, நவீன முறையில் காந்த துகள்களை அரிசியில் தடவி, இரும்பு கலசத்தில் சாயம் பூசி அது அரிசியை ஈர்ப்பது போல் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை நம்பி அவரை அணுகிய பணம் படைத்தவர்களை தனியார் ஹோட்டல் அறைகளுக்கு வரவழைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்வதும், அவர்களுக்கு மது வாங்கிக்கொடுத்து அசந்த நேரத்தில் அவர்களின் காரை திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இரிடியம் மோசடிகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில், இதுபோன்ற மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்குவதை பொதுமக்கள் கைவிட வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags: gopura kalasamஇரிடியம் மோசடிmoney launderingiridiumGopuramAnnamalaiyar Nagar police
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் வைரஸ் – சுகாதார அவசர நிலை? – சிறப்பு கட்டுரை!

Next Post

ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் – சிறப்பு தொகுப்பு!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies