கோபுர கலசத்தில் இரிடியம் : END CARD இல்லாமல் தொடரும் மோசடி - சிறப்பு தொகுப்பு!
Sep 5, 2026, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோபுர கலசத்தில் இரிடியம் : END CARD இல்லாமல் தொடரும் மோசடி – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 3, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிதம்பரம் அருகே கோபுர கலசத்தில் இரிடியம் உள்ளதாகக் கூறி பண மோசடி மற்றும் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

இரிடியம் எளிதில் காணக்கிடைக்காத உலோகம். இது வீட்டில் இருந்தால் செல்வம் செழிக்கும், இரிடியத்தை வாங்கி வெளிநாட்டில் விற்றால் கோடிகளில் புரளலாம் போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி லட்சத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் ஏராளம்.

சதுரங்க வேட்டை படத்திலும் இதே பாணியில் ஒரு கும்பல் பணம் படைத்தவர்களை அணுகி, கோபுர கலசம், அரிசி போன்றவற்றால் சித்து வேலைகளை காட்டி, பண மோசடியில் ஈடுபடும் காட்சிகளை நாம் கட்டாயம் பார்த்திருப்போம்…

இதே டெக்னிக்கை பயன்படுத்தி கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் பண மோசடி மற்றும் கார் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டிப்டாப் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணாமலையார் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு அறிமுகமான ராஜு என்கிற ராஜசேகர் என்பவர் தன்னிடம் இரு கோபுர கலசங்கன் இரிடியம் இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரு கலசத்திற்கு 5 லட்சம் வீதம் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், இரிடியத்தையும், அதனுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என விக்னேஷிடம் பல ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார்.

அப்போது தனது பட்ஜெட்டுக்கு 10 லட்சமெல்லாம் ஜாஸ்தி எனக்கூறி விக்னேஷ் நழுவப் பார்க்க, அவரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளார் ராஜு. பாதிக்கப்பட்ட விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காரில் இரு கோபுர கலசங்களுடன் சென்ற நபரை வாகன சோதனையின்போது மடக்கி பிடித்தனர்.

டிப்டாப் உடையில் சிக்கிய அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இரிடியம் வாங்கி விற்றால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற பேராசையால் மற்றொரு நபரிடம் ராஜு 8 லட்சம் ரூபாயை இழந்தது தெரியவந்தது. அதே மோசடியை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட திட்டமிட்ட ராஜு, நவீன முறையில் காந்த துகள்களை அரிசியில் தடவி, இரும்பு கலசத்தில் சாயம் பூசி அது அரிசியை ஈர்ப்பது போல் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை நம்பி அவரை அணுகிய பணம் படைத்தவர்களை தனியார் ஹோட்டல் அறைகளுக்கு வரவழைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்வதும், அவர்களுக்கு மது வாங்கிக்கொடுத்து அசந்த நேரத்தில் அவர்களின் காரை திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இரிடியம் மோசடிகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில், இதுபோன்ற மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்குவதை பொதுமக்கள் கைவிட வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags: Annamalaiyar Nagar policegopura kalasamஇரிடியம் மோசடிmoney launderingiridiumGopuram
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் வைரஸ் – சுகாதார அவசர நிலை? – சிறப்பு கட்டுரை!

Next Post

ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் – சிறப்பு தொகுப்பு!

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies