ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் - சிறப்பு தொகுப்பு!
Sep 5, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 3, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்த செய்தி தொகுப்பில்..

தைப் பொங்கல் திருநாள் என்றதும் பொங்கலும், கரும்பும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ ஜல்லிக்கட்டுதான் அனைவரது கண் முன்பும் வந்து நிற்கும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளும், அதன் திமில் மீது ஏறி அடக்கும் வீரர்களின் தீரத்தையும் பார்ப்பதே ஒரு கொண்டாட்டம் தான்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ் பெற்றது எனலாம். இந்தாண்டு பொங்கல் திருநாள் வரும் 14-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அடுத்தநாள் மாட்டுப்பொங்கல். இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்துவதில் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது காளைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.

காளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள விஜயபாஸ்கர் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார். பிடிபடாத காளை என்று பெயரெடுத்த கறுப்புக் கொம்பன் காளைக்குச் சொந்தக்காரரும் இவர்தான்.

அதேபோல் வெள்ளைக் கொம்பன் காளையும் அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. தற்போது அவை இரண்டும் உயிரிழந்துவிட்ட  நிலையில், தற்போது சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கொம்பன் 2, கண்ணாவரம் உள்ளிட்ட காளைகளை ஜல்லிக்கட்டில் களமிறக்க உள்ளார் விஜயபாஸ்கர். இதற்காக அவர் தனது தோட்டத்தில் காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார்.

தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக வாடிவாசல்கள் உள்ளன. இங்கு ஜனவரி முதல் மே மாதம் வரை 120-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு, 30க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு, 50க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக தயாராகி வருவது காளைகளும், மாடுபிடி வீரர்களும் மட்டுமல்ல, இந்த வீர விளையாட்டைப் காண தமிழக மக்களும் தான் என்று கூறினால் அது மிகையாகாது.

Tags: PalameduFormer Minister VijayabaskarAlanganallurbullfightersvijaybaskar train bullsjallikattuPongal festivalAvaniyapuram
Share
Tweet
SendShare
Previous Post

கோபுர கலசத்தில் இரிடியம் : END CARD இல்லாமல் தொடரும் மோசடி – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஆருத்ரா தரிசன விழா – ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Related News

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

Load More

அண்மைச் செய்திகள்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies