செந்தில் தொண்டமான் காளைகளுக்கு புதுவித பயிற்சி : பாய்ச்சலுக்கு தயார் - சிறப்பு தொகுப்பு!
Sep 10, 2025, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் தொண்டமான் காளைகளுக்கு புதுவித பயிற்சி : பாய்ச்சலுக்கு தயார் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்துச் செல்ல நவீன ஹைட்ராலிக் வாகனம், பிரத்யேக பயிற்சி என தனது காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முழு வீச்சில் தயார் செய்து வருகிறார் முன்னாள் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு இலங்கையில் பல்வேறு அதிகார மட்டத்தில் பதவிகளை வகித்தவர், தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரான செந்தில் தொண்டமான். தமிழர் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுப்பதில் செந்தில் தொண்டமான் ஆற்றிய பங்களிப்பு ஏராளம்.

புல்லட் காளை, கேஜிஎஃப் காளை, கரிகாலன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தலைசிறந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சொந்தக்காரரான இவர், சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில், தனக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

பயிற்சி என்றால் சாதாரண பயிற்சி அல்ல, ஒவ்வொரு காளைக்கும் தனி அறை, லைட், ஃபேன், கால்நடை மருத்துவர் வழிகாட்டுதலின் படி பேரிச்சம்பழம், பருத்தி விதை, கோதுமை தவிடு உள்ளிட்ட சத்தான உணவுகள், சீரான இடைவேளையில் மருத்துவ பரிசோதனை , நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஆள்குத்து பயிற்சி போன்றவை வழங்கி காளைகளை போட்டிக்கு தயார் செய்து வருகிறார்.

பிடிக்க நினைப்பவர்களை கண்டாலே முட்ட பாயும் இந்த காளைகள் அனைத்துமே, தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வாரிக்குவித்துள்ளன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கூடுதலாக 6 முரட்டு காளைகளை வாங்கியுள்ள செந்தில் தொண்டமான், அவற்றுக்கும் மற்ற காளைகளுடன் சேர்த்து சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டில் புதுப்புது யுக்திகளை கையாள்வதை வழக்கமாக கொண்ட செந்தில் தொண்டமான், இந்த ஆண்டும் தனது காளைகளுக்கு பயிற்சி அளிக்க புதிய யுக்தி ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில், வாடிவாசலில் வீரர்கள் எத்திசையில் இருந்து வந்தாலும் அவர்களிடம் பிடிபடாமல் தப்ப, டம்மி எனப்படும் மனித உருவ பொம்மைகளை பயன்படுத்தி காளைகளுக்கு ஆள்குத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றொருபுறம் செந்தில் தொண்டமான் பெயரில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறங்கவுள்ள மாடுபிடி வீரர்களுக்கும், இங்கு சத்தான உணவுடன் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பே தனது காளைகளை வாடிக்கு அழைத்துச் செல்ல ஏசி வசதியுடன் கூடிய கேரவனை அறிமுகப்படுத்திய செந்தில் தொண்டமான், இம்முறை காளைகளை மூன்று புறங்களில் இருந்தும் ஏற்றி, இறக்க வசதியாக அதி நவீன ஹைட்ராலிக் வாகனங்களை களமிறக்கியுள்ளார்.

சகல வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு, சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு களமிறக்கப்படவுள்ள இந்த காளைகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

Tags: hydraulic vehiclespecial training for bullsFormer Sri Lankan Minister Senthil ThondamanSenthil Thondaman kaligalSenthil Thondaman bulls
ShareTweetSendShare
Previous Post

இந்திய வம்சாவளியினர் 6 பேர் அமெரிக்க எம்பி.க்களாக பதவியேற்பு!

Next Post

Open AI சுசீல் பாலாஜி கொலை செய்யப்பட்டாரா? FBI விசாரணை கோரும் பெற்றோர் – சிறப்பு கட்டுரை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies