நெருங்கும் பொங்கல் பண்டிகை! : தீவிரமடையும் வெல்ல உற்பத்தி
Sep 30, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெருங்கும் பொங்கல் பண்டிகை! : தீவிரமடையும் வெல்ல உற்பத்தி

Web Desk by Web Desk
Jan 6, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி சேலத்தில் வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி போன்ற மாவட்டங்களில்தான் வெல்ல உற்பத்திக்கு தேவையான கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் வெல்ல உற்பத்தி தொழிலை நம்பியே உள்ளது. இப்பகுதிகளில் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும் 50 முதல் 70 டன் வரையிலான வெல்லத்தை, அதன் உற்பத்தியாளர்கள் தினசரி ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், கமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கரும்பாலைகளில் தயாராகும் வெல்லம், செவ்வாய்பேட்டையில் உள்ள வெல்ல மண்டிக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்ல உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.

அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கரும்பாலைகளுக்கு கொண்டு வரப்படும். அவற்றில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் கரும்புச் சாறு, பெரிய கொப்பறையில் காய்ச்சப்பட்டு, மாற்று கொப்பறையில் பதப்படுத்தப்பட்டு, உருண்டை பிடித்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சும் சக்கையும் வீணாகாமல் அடுப்பிற்கு விறகாக பயன்படுத்தப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெல்லத்திற்கு வியாபாரிகள் ஏராளமான ஆர்டர்களை கொடுத்து வருகின்றனர். இதனால் வெல்ல உற்பத்தி இரு மடங்கு அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 30 கிலோ எடைகொண்ட ஒரு சிப்பம் வெல்லம், ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 470 ரூபாய் வரை விற்பனையாவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பண்டிகை நாள் நெருங்க நெருங்க வியாபாரிகள் கூடுதலாக வெல்லத்தை வாங்கி இருப்பு வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், வழக்கத்தை விட அதிகமாக நாள்தோறும் 100 முதல் 150 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Tags: Pongal is approaching! : Intensive jaggery production
ShareTweetSendShare
Previous Post

2025 முதலீடு செய்ய சிறந்த Mutual Fund?

Next Post

ரூ.400 கோடி வர்த்தகம் உச்சம் தொட்ட காலண்டர் உற்பத்தி!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies