நெருங்கும் பொங்கல் பண்டிகை! : தீவிரமடையும் வெல்ல உற்பத்தி
Mar 18, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெருங்கும் பொங்கல் பண்டிகை! : தீவிரமடையும் வெல்ல உற்பத்தி

Murugesan M by Murugesan M
Jan 6, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி சேலத்தில் வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி போன்ற மாவட்டங்களில்தான் வெல்ல உற்பத்திக்கு தேவையான கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் வெல்ல உற்பத்தி தொழிலை நம்பியே உள்ளது. இப்பகுதிகளில் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும் 50 முதல் 70 டன் வரையிலான வெல்லத்தை, அதன் உற்பத்தியாளர்கள் தினசரி ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், கமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கரும்பாலைகளில் தயாராகும் வெல்லம், செவ்வாய்பேட்டையில் உள்ள வெல்ல மண்டிக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்ல உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.

அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கரும்பாலைகளுக்கு கொண்டு வரப்படும். அவற்றில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் கரும்புச் சாறு, பெரிய கொப்பறையில் காய்ச்சப்பட்டு, மாற்று கொப்பறையில் பதப்படுத்தப்பட்டு, உருண்டை பிடித்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சும் சக்கையும் வீணாகாமல் அடுப்பிற்கு விறகாக பயன்படுத்தப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெல்லத்திற்கு வியாபாரிகள் ஏராளமான ஆர்டர்களை கொடுத்து வருகின்றனர். இதனால் வெல்ல உற்பத்தி இரு மடங்கு அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 30 கிலோ எடைகொண்ட ஒரு சிப்பம் வெல்லம், ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 470 ரூபாய் வரை விற்பனையாவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பண்டிகை நாள் நெருங்க நெருங்க வியாபாரிகள் கூடுதலாக வெல்லத்தை வாங்கி இருப்பு வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், வழக்கத்தை விட அதிகமாக நாள்தோறும் 100 முதல் 150 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Tags: Pongal is approaching! : Intensive jaggery production
ShareTweetSendShare
Previous Post

2025 முதலீடு செய்ய சிறந்த Mutual Fund?

Next Post

ரூ.400 கோடி வர்த்தகம் உச்சம் தொட்ட காலண்டர் உற்பத்தி!

Related News

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் திமுக நிர்வாகிகள் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

புதுச்சேரி இண்டி கூட்டணியில் குழப்பம் – தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டையில் திமுக எம்எல்ஏ மனுத்தாக்கல்!

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60% இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

காங்கிரஸில் இருந்து அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் விலகல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies