69 உயிர்கள் பலியான பிறகும் திமுக தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jun 17, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

69 உயிர்கள் பலியான பிறகும் திமுக தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்! - அண்ணாமலை

Web Desk by Web Desk
Jan 6, 2025, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான பிறகும், திமுக தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் நாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான வழக்கு விசாரணையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில், பல ஆண்டுகளாக நடந்து வரும் கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு தவறியிருப்பதையும், மதுவிலக்குத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்றும் மாண்புமிகு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மதுவிலக்குத் துறை அதிகாரிகள் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை என்றும், முதன்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.

அத்துடன், மதுவிலக்குத் துறை அதிகாரிகள் பல தவறுகளைச் செய்வதாகவும், அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் மாண்புமிகு நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் புழக்கம், தமிழகம் முழுவதுமே பெருகியிருப்பதை, தமிழக பாஜக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால், திமுக அரசு, தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்றே கூறிவந்தது.

கள்ளக்குறிச்சி வழக்கில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படவில்லை என்றும், மாதவரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மாதவரம் என்ன ஆந்திராவிலா இருக்கிறது? தங்கள் தவறுகளை மறைக்கவும், கள்ளச்சாராயத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் திமுகவினரைப் பாதுகாக்கவும், திமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 69 உயிர்கள் பலியான பிறகும், தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை.

உண்மையில் மக்கள் நலனுக்காக நடக்கும் ஆட்சி என்றால், இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு, திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiEven after 69 lives were lostDMK did not correct its mistakes! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை! : பிரதமர் மோடி

Next Post

2025 முதலீடு செய்ய சிறந்த Mutual Fund?

Related News

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தைத் தனியார் அபகரிக்க முயல்வதாகத் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு!

அலி கமேனிக்கு மிக நெருக்கமான அலி ஷத்மானியை கொன்ற இஸ்ரேல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies