உணவில் கலக்கப்பட்ட ஈயம், பாதரசம்! : டென்னில் வீரர் ஜோகோவிச் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
Jan 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

உணவில் கலக்கப்பட்ட ஈயம், பாதரசம்! : டென்னில் வீரர் ஜோகோவிச் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2025, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் தான் உண்ட உணவில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் கலக்கப்பட்டிருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுள் ஒருவரான நோவாக் ஜோகோவிச் தொடர்ச்சியாக 428 வாரங்கள், நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக்கொண்ட பெருமைக்கு சொந்தக்காரர். செர்பிய நாட்டு வீரரான இவர் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன் வசம் வைத்துள்ளவர்.

ஆஸ்திரேலியாவில் வரும் 12-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அங்கு சென்றுள்ள ஜோகோவிச், அண்மையில் பகிர்ந்த ஒரு தகவல் விளையாட்டு உலகில் புயலை கிளப்பியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அந்நாட்டுக்குச் சென்ற ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்தால் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவரது நாட்டிற்கே திருப்பியனுப்பப்பட்டார். தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது அப்போது பெரும் சர்ச்சையானது.

இந்த சம்பவத்தால் அதிருப்தியின் உச்சத்திற்கு சென்ற செர்பிய வீரர், அதற்கு அடுத்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் வென்று தனது மன வேதனைக்கு மருந்து போட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு, இத்தாலி வீரரான ஜானிக் சின்னரிடம் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினாலும், இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ஜோகோவிச் களமிறங்கவுள்ளார்.

இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் தங்கிருந்தபோது உண்ட உணவில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் கலக்கப்பட்டிருந்ததால், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஜோகோவிச் பகிர்ந்துள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தான் வெளியேற்றப்படுவதற்கு முன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்டதாகவும், அப்போது அருந்திய உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சொந்த நாட்டிற்கு திரும்பிய பின் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, தனது உடலில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால சம்பவங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போதெல்லாம் தனக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகவும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

முன்னணி வீரர் ஜோகோவிச் பகிர்ந்துள்ள இந்த தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நடப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீரரான நிசேஷ் பசவரெட்டியுடன் மோதவுள்ளார்.

அதில் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் காலிறுதியில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸுடனும், அதிர்ஷ்டம் ஒத்துழைக்கும் பட்சத்தில் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடனும் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக போட்டியாளராக இருந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவை பயிற்சியாளராக கொண்டுள்ள ஜோகோவிச், இந்த தொடரை வென்று தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்..

Tags: Tennis player DjokovicTennis playermercury mixed in food
ShareTweetSendShare
Previous Post

லட்டு விநியோக கவுண்டரில் தீ விபத்து!

Next Post

ஒரே நாளில் ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies