உணவில் கலக்கப்பட்ட ஈயம், பாதரசம்! : டென்னில் வீரர் ஜோகோவிச் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
Nov 7, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

உணவில் கலக்கப்பட்ட ஈயம், பாதரசம்! : டென்னில் வீரர் ஜோகோவிச் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் தான் உண்ட உணவில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் கலக்கப்பட்டிருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுள் ஒருவரான நோவாக் ஜோகோவிச் தொடர்ச்சியாக 428 வாரங்கள், நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக்கொண்ட பெருமைக்கு சொந்தக்காரர். செர்பிய நாட்டு வீரரான இவர் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன் வசம் வைத்துள்ளவர்.

ஆஸ்திரேலியாவில் வரும் 12-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அங்கு சென்றுள்ள ஜோகோவிச், அண்மையில் பகிர்ந்த ஒரு தகவல் விளையாட்டு உலகில் புயலை கிளப்பியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அந்நாட்டுக்குச் சென்ற ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்தால் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவரது நாட்டிற்கே திருப்பியனுப்பப்பட்டார். தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது அப்போது பெரும் சர்ச்சையானது.

இந்த சம்பவத்தால் அதிருப்தியின் உச்சத்திற்கு சென்ற செர்பிய வீரர், அதற்கு அடுத்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் வென்று தனது மன வேதனைக்கு மருந்து போட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு, இத்தாலி வீரரான ஜானிக் சின்னரிடம் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினாலும், இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ஜோகோவிச் களமிறங்கவுள்ளார்.

இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் தங்கிருந்தபோது உண்ட உணவில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் கலக்கப்பட்டிருந்ததால், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஜோகோவிச் பகிர்ந்துள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தான் வெளியேற்றப்படுவதற்கு முன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்டதாகவும், அப்போது அருந்திய உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சொந்த நாட்டிற்கு திரும்பிய பின் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, தனது உடலில் அதிகளவு ஈயம் மற்றும் பாதரசம் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால சம்பவங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போதெல்லாம் தனக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகவும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

முன்னணி வீரர் ஜோகோவிச் பகிர்ந்துள்ள இந்த தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நடப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீரரான நிசேஷ் பசவரெட்டியுடன் மோதவுள்ளார்.

அதில் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் காலிறுதியில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸுடனும், அதிர்ஷ்டம் ஒத்துழைக்கும் பட்சத்தில் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடனும் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக போட்டியாளராக இருந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவை பயிற்சியாளராக கொண்டுள்ள ஜோகோவிச், இந்த தொடரை வென்று தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்..

Tags: Tennis player DjokovicTennis playermercury mixed in food
ShareTweetSendShare
Previous Post

லட்டு விநியோக கவுண்டரில் தீ விபத்து!

Next Post

ஒரே நாளில் ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை!

Related News

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies