சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? - காவல்துறை விளக்கம்!
Jul 26, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? – காவல்துறை விளக்கம்!

Web Desk by Web Desk
Jan 19, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டிற்குள் கடந்த வியாழனன்று நுழைந்த நபர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அந்த நபரை சத்தீஸ்கரில் கைது செய்தனர். மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ஞானேஸ்வரி விரைவு ரயிலில் பயணித்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் தானேவில் உள்ள மதுபான விடுதியில் பணியாற்றி வந்ததாகவும், போலீஸார் கைது செய்ய முயன்றபோது தனது பெயரை மாற்றி கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆகாஷிடம், கர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி அவர் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாந்திரா துணை ஆணையர் தீக்‌ஷித் கேதம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் இந்தியர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கைதான நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய பின்னர், அந்நபர் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக்கொண்டதாகவும் பாந்திரா துணை ஆணையர் கூறினார்.

கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே அந்நபர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: saif ali khan stabbed during robberysaif ali khan actor latest newsactor saif ali khan attackedactor saif ali khan stabbedactor saif ali khan stabbed during robberysaif ali khan stabbed in homeSaif Ali Khan stabbed
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் விளையாடிய போது சோகம் – மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

Next Post

கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள் : குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies