சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? - காவல்துறை விளக்கம்!
Jun 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? – காவல்துறை விளக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 19, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டிற்குள் கடந்த வியாழனன்று நுழைந்த நபர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அந்த நபரை சத்தீஸ்கரில் கைது செய்தனர். மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ஞானேஸ்வரி விரைவு ரயிலில் பயணித்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் தானேவில் உள்ள மதுபான விடுதியில் பணியாற்றி வந்ததாகவும், போலீஸார் கைது செய்ய முயன்றபோது தனது பெயரை மாற்றி கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆகாஷிடம், கர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி அவர் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாந்திரா துணை ஆணையர் தீக்‌ஷித் கேதம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் இந்தியர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கைதான நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய பின்னர், அந்நபர் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக்கொண்டதாகவும் பாந்திரா துணை ஆணையர் கூறினார்.

கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே அந்நபர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: actor saif ali khan stabbedactor saif ali khan stabbed during robberysaif ali khan stabbed in homeSaif Ali Khan stabbedsaif ali khan stabbed during robberysaif ali khan actor latest newsactor saif ali khan attacked
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் விளையாடிய போது சோகம் – மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

Next Post

கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள் : குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies