சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? - காவல்துறை விளக்கம்!
Sep 17, 2026, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? – காவல்துறை விளக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 19, 2025, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டிற்குள் கடந்த வியாழனன்று நுழைந்த நபர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அந்த நபரை சத்தீஸ்கரில் கைது செய்தனர். மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ஞானேஸ்வரி விரைவு ரயிலில் பயணித்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் தானேவில் உள்ள மதுபான விடுதியில் பணியாற்றி வந்ததாகவும், போலீஸார் கைது செய்ய முயன்றபோது தனது பெயரை மாற்றி கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆகாஷிடம், கர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி அவர் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாந்திரா துணை ஆணையர் தீக்‌ஷித் கேதம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் இந்தியர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கைதான நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய பின்னர், அந்நபர் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக்கொண்டதாகவும் பாந்திரா துணை ஆணையர் கூறினார்.

கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே அந்நபர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: actor saif ali khan stabbed during robberysaif ali khan stabbed in homeSaif Ali Khan stabbedsaif ali khan stabbed during robberysaif ali khan actor latest newsactor saif ali khan attackedactor saif ali khan stabbed
Share
Tweet
SendShare
Previous Post

கிரிக்கெட் விளையாடிய போது சோகம் – மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

Next Post

கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள் : குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies