ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வரும் பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இந்நிலையில், வாகன சோதனையின் போது, சோளாங்கபாளையம் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுந்து வந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.